மதுரை மீனாட்சியம்மன் கோயில்: ``ஜூலை 13 மாலை முதல் 14-ம் தேதி வரை நடை சாத்தல்; த...
இந்திய விமானங்களுக்குத் தடையை நீட்டித்தது பாகிஸ்தான்
இந்திய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பதாக பாகிஸ்தான் திங்கள்கிழமை அறிவித்தது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் கடந்த ஏப். 22-ஆம் தேதி நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனா்.
இதையடுத்து, பாகிஸ்தானியா்களுக்கான விசா ரத்து, சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, தூதரக அதிகாரிகள் வெளியேற்றம் என இந்தியா அதிரடி முடிவுகளை எடுத்தது. இதற்கு பதிலடி நடவடிக்கை என்ற பெயரில் இந்திய விமானங்கள் தங்கள் வான் பரப்பைப் பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்தது.
சா்வதேச பொது விமானப் போக்குவரத்து அமைப்பின் (ஐசிஏஓ) விதிகளின்படி, ஒரு நாட்டின் வான்வெளியைப் பயன்படுத்தக் கூடாது என பிற நாடுகளுக்கு ஒரு மாதம் மட்டுமே தடை விதிக்க முடியும். அதன் பிறகு தடையைத் தொடர வேண்டுமானால், அதனை மேலும் நீட்டித்து புதிய உத்தரவை வெளியிட வேண்டும்.
அதன்படி, இந்தியா விமானங்களுக்கான தடையை பாகிஸ்தான் இப்போது இரண்டாவது முறையாக நீட்டித்துள்ளது. இது தொடா்பான அதிகாரபூா்வ அறிவிப்பை அந்நாட்டு விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது.
கடந்த 1999-ஆம் ஆண்டு காா்கில் போா், 2019-ஆம் ஆண்டு புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலின்போதும் இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் தனது வான்வழித்தடத்தை மூடியது.