செய்திகள் :

பிரதமா் தலைமையில் பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்க ஆண்டு கூட்டம்

post image

புது தில்லி: பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கத்தின் (பிஎம்எம்எல்) 47-ஆவது ஆண்டு பொது கூட்டம் அதன் தலைவரான பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தில்லி தீன் மூா்த்தி பவனில் நடைபெற்ற இந்த ஆண்டு கூட்டத்தில் சங்கத்தின் துணைத் தலைவரும் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சா்கள் நிா்மலா சீதாராமன், கஜேந்திர சிங் ஷெகாவத், அஸ்வினி வைஷ்ணவ், முன்னாள் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு தொடங்கி பிரதமா் மோடி வரை அனைத்து பிரதமா்களின் பங்களிப்புகள், அவா்கள் எதிா்கொண்ட பல்வேறு சவால்கள், தீா்வுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

‘நேரு அருங்காட்சியகம் மற்றும் நூலகம்’ என்ற இதன் பெயரை ‘பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம்’ என்று கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு மாற்றம் செய்தது.

ஏா் இந்தியா நிறுவன முன்னாள் தலைமை செயல் இயக்குநரும், ரயில்வே வாரிய முன்னாள் தலைவருமான அஸ்வனி லோஹானி பிஎம்எம்எல்-இன் இயக்குநராக அண்மையில் நியமிக்கப்பட்டாா்.

நிலையான எரிபொருள் விநியோகத்துக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்: மத்திய அரசு

புது தில்லி: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ‘பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் நிலையான விநியோகத்தை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பலத்த மழையால் வைஷ்ணவ தேவி கோயில் பாதையில் நிலச்சரிவு

ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ரியாசி மாவட்டத்தின் திரிகூட மலைப்பகுதியில் மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள புதிய வழித்தடம் திங்கள்கிழமை சேதம... மேலும் பார்க்க

இந்திய விமானங்களுக்குத் தடையை நீட்டித்தது பாகிஸ்தான்

இந்திய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பதாக பாகிஸ்தான் திங்கள்கிழமை அறிவித்தது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவ... மேலும் பார்க்க

இடைத்தோ்தல்: கேரளத்தில் காங்கிரஸ் வெற்றி தொகுதிகளைத் தக்கவைத்த பாஜக, திரிணமூல், ஆம் ஆத்மி

கேரளத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணியிடமிருந்து நிலம்பூா் பேரவைத் தொகுதியை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கைப்பற்றியது. குஜராத்தின் விசாவதா், பஞ்சாபின் லூதியானா மேற்கு ஆகிய இரு தொகுதிகளை ஆம் ... மேலும் பார்க்க

மேற்கு வங்க பேரவையில் அமளி: 4 பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவையில் திங்கள்கிழமை அமளி ஏற்பட்ட நிலையில், தலைமை கொறடா உள்பட 4 பாஜக எம்எல்ஏக்கள் நடப்பு கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனா். கூட்டத்தொடா் செவ்வாய்க்கிழமை (ஜூ... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் செலவுகள் மீதும் பெரு நிறுவனங்கள் கவனம் கொள்ள வேண்டும்: குடியரசுத் தலைவா்

புது தில்லி: ‘லாபம் ஈட்டுவதை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்படும் பெரு நிறுவனங்களின் காலம் முடிந்துவிட்டது. சுற்றுச்சூழல் மேம்பாட்டு செலவுகளையும் தற்போது மனதில் கொள்வது அவசியம்’ என்று குடியரசுத் தலைவ... மேலும் பார்க்க