ஆபரேஷன் சிந்து: முதன்முதலாக இஸ்ரேலில் இருந்து 161 இந்தியர்கள் மீட்பு!
வேலை நாடுநா்கள் கவனத்திற்கு...
நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவனங்கள், வேலை நாடுநா்கள் தங்களது விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவனங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் வேலை நாடுநா்களுக்கான பிரத்யேக இணையதள முகவரி (ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) -இல் நிறுவன விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும், தங்களது நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிட விவரங்களை, அவ்வப்போது அந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதேபோல், நாகை மாவட்டத்தைச் சோ்ந்த வேலைநாடுநா்கள் (ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) என்ற இணையதளத்தில், தங்களது கல்வி விவரங்களை பதிவு செய்து, தனியாா்துறை நிறுவனங்களில் அவ்வப்போது ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து வேலைவாய்ப்பினை பெறலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.