செய்திகள் :

போர் நிறுத்தம் எதிரொலி: 900 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை!

post image

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததன் விளைவாக இந்திய பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை காலை ஏற்றத்துடன் தொடங்கின.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், ஈரானின் மூன்று அணு ஆயுத தளவாடங்கள் மீது அமெரிக்கா அதிரடியாகத் தாக்குதல் நடத்தியதை அடுத்து, திங்கள்கிழமை இரவு கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளங்கள் மீது ஈரான் அதிரடியாக ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில், இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர்நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். இதனால், செவ்வாய்க்கிழமை காலை வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் ஏற்றத்துடன் தொடங்கின.

காலை 9.17 மணி நிலவரப்படி மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1.12 சதவிகிதம் (914 புள்ளிகள்) அதிகரித்து 82,810.81 புள்ளிகளாக உயர்ந்தது. அதேபோல், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 1.07 சதவிகிதம் (267 புள்ளிகள்) அதிகரித்து 25,239.05 புள்ளிகளில் வர்த்தகமானது.

அதானி போர்ட்ஸ், ஜியோ, ஸ்ரீராம் பைனான்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், அதானி எண்டர்பிரைசர்ஸ் உள்ளிட்ட முன்னணி பங்குகள் 5 சதவிகிதம் வரை லாபம் பெற்றுள்ளன. இரு நாடுகளுக்கிடையேயான போரின் காரணமாக அதிகரித்த கச்சா எண்ணெயின் விலை, மீண்டும் சரியத் தொடங்கியுள்ளது.

இதையும் படிக்க... இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்த எதிரொலி! கச்சா எண்ணெய் அதிரடி சரிவு!

பஜாஜ் சிஎன்ஜி பைக்கின் விலை ரூ.5,000 குறைப்பு

புணே: தனது ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் விலையை ரூ.5,000 குறைத்துள்ளதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.அதையடுத்து, அந்த பைக்கின் ஆரம்ப விலை தற்போது ரூ.85,976-ஆக (காட்சியக விலை) குறைந்துள்ளது. டிர... மேலும் பார்க்க

டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் 2.77% பங்குகளை கையகப்படுத்திய மோதிலால் ஓஸ்வால்!

புதுதில்லி: நொய்டாவை தளமாகக் கொண்ட டிக்சன் டெக்னாலஜிஸ் (இந்தியா) நிறுவனத்தின் உரிமையாளரான சுனில் வச்சானி தனது 2.77% பங்குகளை அதாவது 16.70 லட்சம் பங்குகளை ரூ.2,221 கோடிக்கு ஒப்பந்தத்தின் மூலம் கைமாறியத... மேலும் பார்க்க

எரிசக்தி குழாய் திறனில் ரூ.844 கோடி முதலீடு செய்யும் கெயில்!

புது தில்லி: அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதற்காக தஹேஜ்-உரான்-டபோல்-பன்வெல் இயற்கை எரிவாயு குழாய்த் திறனை விரிவுபடுத்த ரூ.844 கோடி முதலீடு செய்யப்போவதாக அரசுக்குச் சொந்தமான எரிவாயு பய... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 23 காசுகள் சரிந்து ரூ.86.78 ஆக முடிவு!

மும்பை: ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதலைத் தொடர்ந்து டாலர் வலுவடைதல் மற்றும் நிலையற்ற கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றின் காரணமாக இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 2... மேலும் பார்க்க

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பால் பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவு!

மும்பை: ஈரானில் உள்ள மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா குண்டு வீசித் தாக்கியதையடுத்து, மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் பதற்றங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் உள்ளூரில் பங்குச... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் போர்: கடும் சரிவில் பங்குச் சந்தை!

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச் சந்தை கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,704.07 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.46... மேலும் பார்க்க