Arun Vijay: "அவரு தெளிவான, பக்குவமான இயக்குநரா இருக்காரு!”- தனுஷ் குறித்து நெகிழும் அருண் விஜய்
நடிகர் அருண் விஜய்`ரெட்ட தல' திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘இட்லி கடை’ படத்திலும் நடித்து முடித்திருக்கிறார்.
இந்நிலையில் திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த பிறகு அருண் விஜய் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். “ `ரெட்ட தல', ‘இட்லி கடை’ என இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. இரண்டு படங்களும் ரிலீஸிற்கு தயாராக இருக்கிறது” என்றிருக்கிறார்.

தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் நடித்தது குறித்த கேள்விக்கு, “ அவர் இயக்கத்தில் நடித்தது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. தெளிவான பக்குவமான இயக்குநராக இருக்கிறார். அவரை ஒரு நடிகராக பார்ப்பதை விட இயக்குநராகப் பார்ப்பது நன்றாக இருந்தது. படமும் எல்லோருக்கும் கனெக்ட் ஆகும்.
என்னுடைய கதாபாத்திரமும் நன்றாக இருக்கும். நிறையக் கதைகளை தனுஷ் எழுதிக்கொண்டிருக்கிறார். கடினமாக உழைத்துக்கொண்டிருக்கிறார். அதைப் பார்க்கும்போது உத்வேகமாக இருக்கும்.
‘ராயன்’ படத்தைப் பார்த்தப்போது தனுஷ் உடன் பணியாற்ற வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. படம் நன்றாக இருக்கும். எல்லோருக்கும் பிடிக்கும்.” என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து நடிகர் சங்கம் கட்டடம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதிலளித்த அவர், “ கார்த்தியிடம் பேசினேன். பணிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. நடிகர்களின் கனவு நனவாகும்போது சந்தோஷமாக இருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...