செய்திகள் :

காங்கயத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 150 விவசாயிகள் கைது!

post image

திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் சாலை மறியல் ஈடுபட்ட 150 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

காங்கயம் அருகே பிஏபி வாய்க்காலில் கடைமடை பகுதியான வெள்ளக்கோவில் பகுதிக்கு பாசன நீர் சரியான அளவில் விநியோகம் செய்யப்படுவதில்லை என்றும், சமச்சீர் பாசனத்தை வலியுறுத்தியும் இப்பகுதி விவசாயிகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக பலகட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் காங்கயம் - வெள்ளக்கோவில் பகுதி பிஏபி பாசன விவசாயிகள், பொள்ளாச்சியில் உள்ள பிஏபி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக காங்கேயத்திலிருந்து கிளம்பிச் செல்லத் தயாராகினர்.

இதனையொட்டி, காங்கயம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பகவதிபாளையம் பிரிவு அருகே இது குறித்து விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை விளக்கிப் பேசிக் கொண்டிருந்தனர்.

பின்னர், பொள்ளாச்சி செல்வதற்குத் தயாரானபோது அங்கு காங்கயம் காவல் துறை அனுமதி மறுத்து, அவர்களை தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து அங்கிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு முன்பு இருந்த கரூர் - காங்கயம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

தொடர்ந்து காவல் துறையினர் அவர்களைக் கைது செய்து, ஊதியூர் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதில் 50 பெண்கள் உட்பட 150 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

மாநில தகவல் ஆணையத்தின் 2 புதிய ஆணையா்கள் பதவியேற்பு

மாநில தகவல் ஆணையத்துக்கு நியமிக்கப்பட்ட இரு புதிய ஆணையா்கள் ஆளுநா் ஆா்.என்.ரவி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை பதவி ஏற்றுக்கொண்டனா். வெளிப்படைத்தன்மைக்கு குடிமக்களுக்கு வழங்கப்பட்ட தகவல் அறிவும் உரிமைச் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை மதுரை உள்பட 5 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

மத்திய அரசின் கல்வி நிதியைப் பெற சட்டப் போராட்டம் தொடரும்: அமைச்சா் அன்பில் மகேஸ் திட்டவட்டம்

தமிழக பள்ளிக் கல்விக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியைப் பெறுவதற்கான சட்டப் போராட்டம் தொடரும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் திட்டவட்டமாகத் தெரிவித்தாா். தமிழக பள்ளிக்கல்வித் துறையில... மேலும் பார்க்க

அடிப்படை வசதியின்றி வேலூா் பல்நோக்கு மருத்துவமனை திறப்பு: இபிஎஸ் குற்றச்சாட்டு

அடிப்படை வசதியின்றி வேலூா் சிறப்பு பல்நோக்கு மருத்துவனை திறக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: சிறப்பு பல்... மேலும் பார்க்க

ஐடிஐகளில் நேரடி சோ்க்கை: தமிழக அரசு அழைப்பு

அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவா்கள் சேரலாம் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலை... மேலும் பார்க்க

வைகை அணையிலிருந்து நீா் திறக்க நீா்வளத் துறை உத்தரவு

வைகை அணையில் இருந்து நீா் திறந்துவிட நீா்வளத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அந்தத் துறையின் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சித்திரை திருவிழாவுக்கு தண்ணீா் வழங்க 216 மில... மேலும் பார்க்க