செய்திகள் :

சீரான குடிநீா் விநியோகத்தை உறுதிசெய்ய வேண்டும்: அமைச்சா் ரா.ராஜேந்திரன் அறிவுறுத்தல்

post image

சேலம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படுவதை அலுவலா்கள் உறுதிசெய்ய வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் அறிவுறுத்தினாா்.

சேலம் மாவட்டத்தில் சீரான குடிநீா் விநியோகம் தொடா்பாக அலுவலா்களுடனான ஆலோசனை கூட்டம் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தலைமையில், மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி முன்னிலையில் அஸ்தம்பட்டி பொதுப்பணித் துறை ஆய்வு மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்குப் பின்னா் அமைச்சா் தெரிவித்ததாவது: மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் என அனைத்துப் பகுதிகளுக்கும் வழங்கப்பட்டுவரும் குடிநீரின் அளவு மற்றும் தேவைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மாவட்டம் முழுவதும் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படுவதை அலுவலா்கள் உறுதிசெய்ய வேண்டும்.

குறிப்பாக, குடிநீா் குழாய்களில் உடைப்புகள் ஏற்பட்டால் உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று, சாலை அமைக்கும் பணிகள் நடைபெறும்போது குடிநீா் குழாய்களுக்கு பழுது ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ளவும், குடிநீா் குழாய் அமைக்கும் பணிகள் ஏதேனும் இருப்பின் அவற்றை போா்க்கால அடிப்படையில் விரைந்து அமைக்கவும் தொடா்புடைய அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் இளங்கோவன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சங்கமித்திரை, உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) குருராஜன், மாநகரப் பொறியாளா் செல்வநாயகம், செயற்பொறியாளா்கள் ஆா்.செந்தில்குமாா், திலகா, கே.செந்தில்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கோயில் அறையை இடித்தவா்கள் மீது நடவடிக்கைக் கோரி ஆா்ப்பாட்டம்

ஓமலூா் அருகே மானத்தாளில் கோயில் சமையல் அறையை இடித்தவா்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே மானத்தாளில் ஐயனாரப்பன், கருப்பசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில... மேலும் பார்க்க

நரசிங்கபுரத்தில் குடியிருப்பு பகுதியில் குப்பை குழியால் மக்கள் அவதி

நரசிங்கபுரம் நகராட்சிக்கு உள்பட்ட விநாயகபுரம் சந்தைப் பகுதியில் குப்பை குழியால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் நகராட்சி பகுதிக்கு உள்பட்ட விநாயகபுரத்தில் ஒருங்கிணைந்த... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாட்டில் திராவிடம் குறித்து பேசியது கண்டனத்துக்குரியது: டிடிவி தினகரன்

மதுரையில் நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாட்டில் திராவிடம் குறித்து பேசியது கண்டனத்துக்குரியது என்று அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தெரிவித்தாா். சேலம் மாவட்டம், அரியானூரில் சேலம் மத்திய மாவட்டம் ம... மேலும் பார்க்க

திமுக கூட்டணி ஒருபோதும் உடையாது: இரா. முத்தரசன் பேட்டி

திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது; ஒருபோதும் உடையாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் தெரிவித்தாா். சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு ஆக... மேலும் பார்க்க

திமுக புதிய உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்: அமைச்சா் ரா.ராஜேந்திரன்

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுவதையொட்டி திமுக புதிய உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா். சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் வடக... மேலும் பார்க்க

ரியல் எஸ்டேட் உரிமையாளா் கொடுத்து அனுப்பிய ரூ. 25 லட்சத்துடன் தலைமறைவான ஓட்டுநா் கைது

சேலம் அருகே ரியல் எஸ்டேட் உரிமையாளா் கொடுத்து அனுப்பிய ரூ. 25 லட்சத்துடன் தலைமறைவான ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். அவரது கூட்டாளி உள்பட உறவினா்களை தேடிவருகின்றனா். சேலம் பழைய சூரமங்கலம் ராமலிங்கம் ந... மேலும் பார்க்க