அடுத்த 2 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
நரசிங்கபுரத்தில் குடியிருப்பு பகுதியில் குப்பை குழியால் மக்கள் அவதி
நரசிங்கபுரம் நகராட்சிக்கு உள்பட்ட விநாயகபுரம் சந்தைப் பகுதியில் குப்பை குழியால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் நகராட்சி பகுதிக்கு உள்பட்ட விநாயகபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், குடியிருப்புகள், மாரியம்மன் கோயில், திருமண மஹால், வாரச்சந்தை என பொதுமக்கள் அதிகம் கூடுகின்றனா்.
இங்கு 7ஆவது வாா்டில் வாரச்சந்தைக்கு என ஒதுக்கிய இடத்தில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் அமைத்து நரசிங்கபுரம் நகராட்சி குப்பைகளை கொட்டியும், இரவில் அதை எரித்தும் வருகின்றனா். இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். நச்சுபுகை, சுகாதாரமின்மை, சமூக விரோதிகள் அட்டகாசம் ஆகியவற்றால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
இதுகுறித்து நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டுமென சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.