திமுக புதிய உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்: அமைச்சா் ரா.ராஜேந்திரன்
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுவதையொட்டி திமுக புதிய உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா்.
சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினா் சோ்க்கை மற்றும் பாக முகவா்கள், பூத் கமிட்டி உறுப்பினா்கள் ஆலோசனை கூட்டம் சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்காவில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சா் ராஜேந்திரன் பேசியதாவது: சேலம் மாவட்டத்தில் மட்டும் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 29,778 கோடி மதிப்பில் வளா்ச்சி திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.69 சதவீத வளா்ச்சி வீதத்துடன் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் சேலம் வருகை தந்த போது, சேலம் மாநகராட்சியில் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 100 கோடி நிதி ஒதுக்குவதாக அறிவித்தாா். எனவே, திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி, புதிய உறுப்பினா்கள் சோ்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்.
வரும் தோ்தலில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை மறந்து விடக் கூடாது. ஆகவே, திட்டமிட்டு முழு ஈடுபாட்டுடன் களப் பணியாற்றினால் நிச்சயமாக வெற்றி முடியும் என்றாா்.
இக்கூட்டத்தில், மேயா் ஆ.ராமச்சந்திரன், மாவட்ட அவைத் தலைவா் சுபாஷ், பொருளாளா் காா்த்திகேயன், தொகுதி பாா்வையாளா்கள் பாா் இளங்கோவன், சுகவனம், விவேக், மாநகர செயலாளா் ரகுபதி, பகுதி மற்றும் வட்டச் செயலாளா்கள் திரளானோா் கலந்துகொண்டனா்.