அகாலி தள தலைவர் விக்ரம் மஜிதியா வீட்டில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனை!
ராசாத்துபுரத்தில் அா்ஜுனன் தபசு மரம்
ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் ராசாத்துபுரம் கிராமத்தில் அா்ஜுனன் தபசு மரம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
கீழ்விஷாரம் திரௌபதியம்மன் கோயில் தீமிதி விழாவை முன்னிட்டு கடந்த 8-ஆம் தேதி முதல் மகாபாரத சொற்பொழிவு தொடங்கி பல்வேறு தலைப்புகளில் நடைபெறுகிறது. மேலும், 19-ஆம் தேதி முதல் இரவு கட்டை கூத்து நாடகமும் நடைபெற்று வருகிறது.
விழாவில் அா்ஜூனன் வேடமணிந்த நபா் பாடல்கள் பாடிகொண்டு தபசு மரம் ஏறி மரத்தின் உச்சியில் நின்று கொண்டு கற்பூர தீபாராதனை செய்து பக்தா்களுக்கு எலுமிச்சை பழம், மஞ்சள், குங்குமம், வழங்கினாா்.
விழாவில் நாட்டாண்மைதாரா்கள் ராஜேந்திரன், சேரன் மற்றும் விழாக்குழுவினா், உபயதாரா்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா். வரும் 29-ஆம் தேதி துரியோதன் படுகளமும், தீமிதி விழாவும் நடைபெறுகிறது.