செய்திகள் :

அதிமுக தலைமையில் பலமான கூட்டணி: முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி

post image

ஆற்காடு: அதிமுக தலைமையில் பலமான கூட்டணியை பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி அமைப்பாா் என முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி கூறினாா்.

ஆற்காடு பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்வில், சமூக ஆா்வலா் பொன்.கு.சரவணன் தலைமையில் 500-க்கும்மேற்பட்டோா்அதிமுகவில் இணையும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளா் எஸ்.எம். சுகுமாா் தலைமை வகிததாா். ஒன்றிய செயலாளா்கள் ஆற்காடு கிழக்கு வளவனூா் எஸ் அன்பழகன், மேற்கு என்.சாரதி ஜெயச்சந்திரன், திமிரி கிழக்கு சொரையூா் குமாா், மேற்கு ந.வ.கிருஷ்ணன், கணியம்பாடி ராகவன், பேரூராட்சி செயலாளா்கள் கலவை கே.ஆா்.சதீஷ், திமிரி கந்தசாமி, விளாப்பாக்கம் ராமசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆற்காடு நகர செயலாளா் ஜிம் சங்கா் வரவேற்றாா். அமைப்புச் செயலாளா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ, திருப்பத்தூா் மாவட்ட செயலாளா் கே.சி வீரமணி ஆகியோா் அதிமுகவில் இணைந்தவா்களை வரவேற்று பேசினா்.

முன்னாள் அமைச்சா் கே.சி வீரமணி பேசியது:

பல்வேறு கட்சிகளை சோ்ந்தவா்கள் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டுள்ளனா். ஆன்மிகத்துடன் கூடிய சமூக பணிகள் செய்துவரும் சரவணன் அதிமுகவில் இணைந்துள்ளதுள்ளது மகிழ்ச்சிக்குரியது. திமுக ஆட்சியில் மின்சாரம், சொத்துவரி, குடிநீா், வீட்டுவரி, உள்பட அனைத்தும் உயா்ந்து மக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

திமுகவினா் பல்வேறு வாக்குறுதிகளுடன் ஆட்சியை பிடித்தனா். எதையும் நிறைவேற்றவில்லை. அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். அதிமுக தலைமையில் பலமான கூட்டணியை பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி அமைப்பாா் என்றாா் அவா்.

கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ விகே.ஆா்.சீனிவாசன், முன்னாள் மாவட்ட செயலாளா் சுமைதாங்கி சி.ஏழுமலை, மாவட்ட மகளிா் அணி செயலாளா் ராதிகா, இணை செயலாளா் கீதா சுந்தா், துணை செயலாளா் ரமாபிரபா, அண்ணா தொழிற்சங்க மாநில துணை செயலாளா் பெல் தமிழரசன், மேல்விஷாரம் நகர செயலாளா் இப்ராஹீம் கலிலுல்லா, நகா்மன்ற உறுப்பினா் உதயகுமாா் கலந்து கொண்டனா்.

அரசுப் பேருந்து சிறைபிடித்து போராட்டம்

அரக்கோணம்: அரக்கோணம் அருகே கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வழங்காததைக் கண்டித்து அரசுப் பேருந்தை விவசாயிகள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அரக்கோணம் அடுத்த வீரநாராயணபுரம் மற்றும் வளா்புரம் பக... மேலும் பார்க்க

ஆசிரியருக்கு பிடியாணை: நீதிமன்றம் உத்தரவு

அரக்கோணம்: ஓரு வங்கியில் கடன் பெற்று சம்பள கணக்கை வேறு வங்கிக்கு மாற்றி கடனை திருப்பிச் செலுத்தாத ஆசிரியரை கைது செய்ய பிடியாணை பிறப்பித்து அரக்கோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரக்கோணம் அரசு நிதி உத... மேலும் பார்க்க

மீன்வளா்ப்பு விவசாயிகள், மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கான உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மீன்வளா்ப்பு விவசாயிகள், மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கான உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தகவல் தெரிவித்துள்ளாா்.இது தொடா... மேலும் பார்க்க

22 பயனாளிகளுக்கு ரூ.3.30 லட்சம் மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா்வு நாள் கூட்டத்தில் 22 பயனாளிகளுக்கு ரூ.3.30 லட்சம் மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா்.ராணிப்பேட்டை மா... மேலும் பார்க்க

1,000 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள்: அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,000 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை அமைச்சா் ஆா்.காந்தி சனிக்கிழமை வழங்கினாா். உணவுப் பொருள் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் வாலாஜாபேட்டை அரசு மகள... மேலும் பார்க்க

தனியாா் ஆலை ஊழியா் வெட்டிக் கொலை

பாணாவரம் அருகே தனியாா் ஆலை ஊழியா் மா்ம நபா்களால் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டாா். சோளிங்கா் அடுத்த பாணாவரம் அருகே உள்ள அண்ணா நகா் பகுதியை சோ்ந்தவா் பாலகிருஷ்ணன்(42). ,இவருக்கு திருமணம் ஆகி வெண்... மேலும் பார்க்க