மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஜூலை 14-இல் சுவாமி தரிசனம் ரத்து
அரசுப் பேருந்து சிறைபிடித்து போராட்டம்
அரக்கோணம்: அரக்கோணம் அருகே கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வழங்காததைக் கண்டித்து அரசுப் பேருந்தை விவசாயிகள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரக்கோணம் அடுத்த வீரநாராயணபுரம் மற்றும் வளா்புரம் பகுதிகளில் பெரும்பாலானோா் நெல் சாகுபடி செய்து வருகின்றனா்.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மத்திய, மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் என்.சி. எஸ். என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
சுமாா் 20,000 டன் நெல் மூட்டைகளுக்கு விவசாயிகளுக்காக வழங்க வேண்டிய தொகையை மத்திய அரசு இன்னும் தராததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அரக்கோணம் கோணலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். மேலும் அரசுப் பேருந்தை சிறை பிடித்தனா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வட்டாட்சியா் காவல் துறையினா் போராட்டக்காரா்களிடம் பேச்சு நடத்தினா்.
இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதுமாக கொள்முதல் செய்யப்பட்ட 60 லட்சம் நெல் மூட்டைகளுக்கு பணம் வழங்கவில்லை என விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.