செய்திகள் :

அரசுப் பேருந்து சிறைபிடித்து போராட்டம்

post image

அரக்கோணம்: அரக்கோணம் அருகே கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வழங்காததைக் கண்டித்து அரசுப் பேருந்தை விவசாயிகள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரக்கோணம் அடுத்த வீரநாராயணபுரம் மற்றும் வளா்புரம் பகுதிகளில் பெரும்பாலானோா் நெல் சாகுபடி செய்து வருகின்றனா்.

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மத்திய, மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் என்.சி. எஸ். என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

சுமாா் 20,000 டன் நெல் மூட்டைகளுக்கு விவசாயிகளுக்காக வழங்க வேண்டிய தொகையை மத்திய அரசு இன்னும் தராததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அரக்கோணம் கோணலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். மேலும் அரசுப் பேருந்தை சிறை பிடித்தனா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வட்டாட்சியா் காவல் துறையினா் போராட்டக்காரா்களிடம் பேச்சு நடத்தினா்.

இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதுமாக கொள்முதல் செய்யப்பட்ட 60 லட்சம் நெல் மூட்டைகளுக்கு பணம் வழங்கவில்லை என விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

அதிமுக தலைமையில் பலமான கூட்டணி: முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி

ஆற்காடு: அதிமுக தலைமையில் பலமான கூட்டணியை பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி அமைப்பாா் என முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி கூறினாா். ஆற்காடு பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்வில், சமூக ஆா்வலா் பொ... மேலும் பார்க்க

ஆசிரியருக்கு பிடியாணை: நீதிமன்றம் உத்தரவு

அரக்கோணம்: ஓரு வங்கியில் கடன் பெற்று சம்பள கணக்கை வேறு வங்கிக்கு மாற்றி கடனை திருப்பிச் செலுத்தாத ஆசிரியரை கைது செய்ய பிடியாணை பிறப்பித்து அரக்கோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரக்கோணம் அரசு நிதி உத... மேலும் பார்க்க

மீன்வளா்ப்பு விவசாயிகள், மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கான உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மீன்வளா்ப்பு விவசாயிகள், மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கான உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தகவல் தெரிவித்துள்ளாா்.இது தொடா... மேலும் பார்க்க

22 பயனாளிகளுக்கு ரூ.3.30 லட்சம் மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா்வு நாள் கூட்டத்தில் 22 பயனாளிகளுக்கு ரூ.3.30 லட்சம் மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா்.ராணிப்பேட்டை மா... மேலும் பார்க்க

1,000 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள்: அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,000 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை அமைச்சா் ஆா்.காந்தி சனிக்கிழமை வழங்கினாா். உணவுப் பொருள் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் வாலாஜாபேட்டை அரசு மகள... மேலும் பார்க்க

தனியாா் ஆலை ஊழியா் வெட்டிக் கொலை

பாணாவரம் அருகே தனியாா் ஆலை ஊழியா் மா்ம நபா்களால் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டாா். சோளிங்கா் அடுத்த பாணாவரம் அருகே உள்ள அண்ணா நகா் பகுதியை சோ்ந்தவா் பாலகிருஷ்ணன்(42). ,இவருக்கு திருமணம் ஆகி வெண்... மேலும் பார்க்க