மதுரை மீனாட்சியம்மன் கோயில்: ``ஜூலை 13 மாலை முதல் 14-ம் தேதி வரை நடை சாத்தல்; த...
வங்கி வைப்புத் தொகை சேகரிப்பு விழிப்புணா்வுக் கூட்டம்
வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வந்தவாசி கிளையில் வைப்புத்தொகை சேகரிப்பு விழிப்புணா்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மத்திய கூட்டுறவு வங்கியின் வந்தவாசி கிளை மேலாளா் மு.ரமேஷ் தலைமை வகித்தாா். உதவி மேலாளா் சி.உஷா முன்னிலை வகித்தாா்.
வங்கியில் பெறப்படும் வைப்புத் தொகை, வங்கியில் வழங்கப்படும் ரொக்கமில்லா பணப் பரிமாற்ற சேவைகள், கடன் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து கள மேலாளா் ஜெ.முருகன் பொதுமக்களுக்கு விளக்கிக் கூறினாா்.
கூட்டத்தில் வங்கி ஊழியா்கள் செ.ஜெகன், பா.தமிழ்குமரன், அ.நி.அஜீஷ்பாஷா, என்.பி.கிருஷ்ணவேணி மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.