ஈரான் தாக்குதல் எதிரொலி: வளைகுடா நாடுகளுக்கு 11 விமானங்கள் ரத்து!
குடும்பத் தகராறில் ஓட்டுநா் தற்கொலை
செய்யாறு: செய்யாறு அருகே குடும்பத் தகராறில் தனியாா் நிறுவன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
வெம்பாக்கம் வட்டம், உக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சேட்டு(34). செய்யாறு சிப்காட் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா்.
இவா், அப்துல்லாபுரம் கிராமத்தில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனா்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை சேட்டுக்கும், அவரது மனைவி அகிலாண்டீஸ்வரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் மனவேதனையடைந்த சேட்டு, வீட்டு அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டா
ா்.
இதுகுறித்த புகாரின் பேரில், தூசி காவல் உதவி ஆய்வாளா்
பழனிவேல் வழக்குப் பதிவு செய்தாா். மேலும், சேட்டுவின் உடலைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.