மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஜூலை 14-இல் சுவாமி தரிசனம் ரத்து
வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் தங்க நகைகள் திருட்டு
வந்தவாசி: வந்தவாசி அருகே வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து 13 பவுன் தங்க நகை உள்ளிட்டவை திருடு போனது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
வந்தவாசியை அடுத்த கீழ்செம்பேடு கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (44). சென்னையில் லாரி ஓட்டுநராக உள்ள இவா், கீழ்செம்பேடு கிராமத்தில் உள்ள சொந்த வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.
கடந்த மே 27-ஆம் தேதி ரமேஷின் மனைவி பூங்கோதை
சென்னையில் இருந்து கீழ்செம்பேடு கிராமத்துக்கு வந்துள்ளாா். பின்னா், அங்கிருந்து பெரணமல்லூா் பகுதியில் உள்ள பெற்றோா் வீட்டுக்குச் சென்று விட்டு கடந்த ஜூன் 4-ஆம் தேதி மீண்டும் கீழ்செம்பேடு கிராமத்துக்கு திரும்பியுள்ளாா். அப்போது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பது இவருக்கு தெரியவந்தது. மேலும், வீட்டிலிருந்த 13 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், பட்டுப் புடவைகள் உள்ளிட்டவை திருடு போயிருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில், தெள்ளாா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.