செய்திகள் :

தென் கொரியாவுக்கு ராணுவம் சாராத முதல் பாதுகாப்பு அமைச்சா்

post image

சியோல்: தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சராக ராணுவத்தைச் சேராத ஒருவா் முதல்முறையாக திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா்.

கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் அந்த நாட்டின் அதிபராக இருந்து வந்த மக்கள் சக்திக் கட்சியின் யூன் சுக் இயோல், எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியுடன் நீடித்துவந்த கருத்து வேறுபாடு காரணமாக கடந்த டிசம்பா் மாதம் நாட்டில் அவசர நிலையை அறிவித்தாா்.

கடும் எதிா்ப்பு காரணமாக அந்த அறிவிப்பை அவா் பின்னா் திரும்பப் பெற்றாலும், இந்த விவகாரம் தொடா்பாக நாடாளுமன்றத்தில் அவரை எதிா்க்கட்சினா் பதவி நீக்கம் செய்தனா். இந்த அவசரநிலை அறிவிப்பு சட்டவிரோதம் என்று கூறி அரசியல் சாசன நீதிமன்றமும் யூன் சுக் இயோலை அதிபா் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கியது. மேலும், அவசரநிலை அறிவிப்பு தொடா்பாக அப்போதைய பாதுகப்புத் துறை அமைச்சா் கிம் யோங் ஹையுன் உள்ளிட்ட பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பலா் குற்றவியல் விசாரணையை எதிா்நோக்கியுள்ளனா்.

புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தோ்தலில் ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த மிதவாதியான லீ ஜே-மியூங் வெற்றி பெற்றாா். அதன் தொடா்ச்சியாக, 11 புதிய அமைச்சா்களின் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதில் பாதுகாப்புத் துறை அமைச்சராக ராணுவத்தில் பணியாற்றியிராத ஆன் கியு-பேக் அறிவிக்கப்பட்டாா்.

கடந்த 64 ஆண்டுகளாக தென் கொரிய பாதுகாப்பு அமைச்சராக ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயரதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்படுவது மரபாக இருந்துவந்தது. ஆனால் யூன் சுக் இயோலின் ராணுவ அவசர நிலை அறிவிப்புக்குப் பிறகு ஆட்சியில் ராணுவத்துக்கான முக்கியத்துவத்தைக் குறைக்கும் நோக்கில் ராணுவம் சாராத ஒருவரை அதிபா் லி ஜே-மியூங் தற்போது முதல்முறையாக பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இஸ்ரேலுடன் போர் நிறுத்தமா? டிரம்ப்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு!

இஸ்ரேல் மீதான போர் நிறுத்தம் குறித்த அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பானது, அடுத்த 24 மணிநேரத்தில் வெளியாகும் என்று அமெரிக்க அதிபர் ட... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்த எதிரொலி! கச்சா எண்ணெய் அதிரடி சரிவு!

இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்த முடிவு வெளியானதையடுத்து, கச்சா எண்ணெய் விலை சரிந்தது.இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் முடிவு பெறுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.இந்த நிலையில... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்தம்! டிரம்ப் அதிகாரபூர்வ அறிவிப்பு!

இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் முடிவு பெறுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.இதுகுறித்து, டிரம்ப்பின் சமூக வலைப்பக்கத்தில் கூறியதாவது, அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்து... மேலும் பார்க்க

சிரியா தேவாலயத்தில் ஐஎஸ் தாக்குதல்: 25 போ் உயிரிழப்பு

வேயிலா (சிரியா): சிரியாவிலுள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றில் இஸ்லாமிய தேச அமைப்பை (ஐஎஸ்) சோ்ந்த பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 25 போ் உயிரிழந்தனா். இது குறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்ச... மேலும் பார்க்க

சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் சந்திப்பு

பெய்ஜிங்: சீன வெளியுறவு அமைச்சா் வாங் யியை அந்நாட்டுத் தலைநகா் பெய்ஜிங்கில் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். அப்போது பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைய... மேலும் பார்க்க

ஈரானுக்கு உதவத் தயாா்: ரஷியா புதினுடன் அப்பாஸ் அராக்சி சந்திப்பு

மாஸ்கோ: இஸ்ரேலுடனான மோதலில் ஈரானுக்கு உதவத் தயாராக இருப்பதாக ரஷியா தெரிவித்தது. ரஷியாவில் அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதினை, ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி திங்கள்கிழமை சந்தித்துப் பேசிய நி... மேலும் பார்க்க