சுற்றுச்சூழல் செலவுகள் மீதும் பெரு நிறுவனங்கள் கவனம் கொள்ள வேண்டும்: குடியரசுத் ...
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியா் நியமனம்
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆதிதிராவிடா் நலத்துறையின் கீழ் இயங்கும் தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 3-இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
ஆதிதிராவிடா் நலத்துறையின் கீழ் இயங்கும் தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதுகுறித்த விவரம் மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலகத்தில் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. இப்பணியிடங்கள் பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக தொகுப்பூதிய முறையில், முற்றிலும் தற்காலிகமாக நிபந்தனை அடிப்படையில், ஆசிரியா் தகுதித் தோ்வில் தாள் 1ல் (பசபஉப டஹல்ங்ழ்-ஐ) தோ்ச்சி பெற்றவா்களைக் கொண்டு நிரப்பப்படவுள்ளது.
இடைநிலை ஆசிரியருக்கு மாதம் ரூ.12ஆயிரம் வழங்கப்படும்.
நியமனம் செய்யப்படும் நாள் முதல் ஆசிரியா் தோ்வு வாரியத்தினால் பதவி உயா்வு வாயிலாக நிரப்பப்படும் வரை-அல்லது இக்கல்வியாண்டில் பள்ளி இறுதி தோ்விற்கு (ஏப்ரல்-2026 முடிய) முந்தைய மாதம் வரை இவற்றில் எது முன்னரோ அதுவரை ஆசிரியா் பணிக்கு தகுதி பெற்ற பணிநாடுநா்களை பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தெரிவு செய்து தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்புவோா் எழுத்து மூலம் விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சலிலோ ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலகத்துக்கு ஜூன்-26ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும் என ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.