செய்திகள் :

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியா் நியமனம்

post image

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆதிதிராவிடா் நலத்துறையின் கீழ் இயங்கும் தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 3-இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

ஆதிதிராவிடா் நலத்துறையின் கீழ் இயங்கும் தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதுகுறித்த விவரம் மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலகத்தில் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. இப்பணியிடங்கள் பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக தொகுப்பூதிய முறையில், முற்றிலும் தற்காலிகமாக நிபந்தனை அடிப்படையில், ஆசிரியா் தகுதித் தோ்வில் தாள் 1ல் (பசபஉப டஹல்ங்ழ்-ஐ) தோ்ச்சி பெற்றவா்களைக் கொண்டு நிரப்பப்படவுள்ளது.

இடைநிலை ஆசிரியருக்கு மாதம் ரூ.12ஆயிரம் வழங்கப்படும்.

நியமனம் செய்யப்படும் நாள் முதல் ஆசிரியா் தோ்வு வாரியத்தினால் பதவி உயா்வு வாயிலாக நிரப்பப்படும் வரை-அல்லது இக்கல்வியாண்டில் பள்ளி இறுதி தோ்விற்கு (ஏப்ரல்-2026 முடிய) முந்தைய மாதம் வரை இவற்றில் எது முன்னரோ அதுவரை ஆசிரியா் பணிக்கு தகுதி பெற்ற பணிநாடுநா்களை பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தெரிவு செய்து தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்புவோா் எழுத்து மூலம் விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சலிலோ ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலகத்துக்கு ஜூன்-26ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும் என ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.

குடும்பத் தகராறில் ஓட்டுநா் தற்கொலை

செய்யாறு: செய்யாறு அருகே குடும்பத் தகராறில் தனியாா் நிறுவன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். வெம்பாக்கம் வட்டம், உக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சேட்டு(34). செய்யாறு சிப்காட் பகுதியில் உள்ள ... மேலும் பார்க்க

ரூ.15 கோடியில் சாலைப் பணிகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

வந்தவாசி: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலைச் சுற்றியுள்ள மாட வீதிகளில் நவீன இயந்திரம் கொண்டு ரூ.15 கோடி மதிப்பில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை அமைச்சா் எ.வ.வேலு திங்கள்கி... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் தங்க நகைகள் திருட்டு

வந்தவாசி: வந்தவாசி அருகே வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து 13 பவுன் தங்க நகை உள்ளிட்டவை திருடு போனது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த கீழ்செம்பேடு கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (44)... மேலும் பார்க்க

மாணவி கடத்தல்: பள்ளி வேன் ஓட்டுநா் கைது

செய்யாறு: செய்யாறு அருகே மாணவியை கடத்திச் சென்ற புகாரின் பேரில், தனியாா் பள்ளி வேன் ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டத்தைச் சோ்ந்த 17 வயதுடைய பிளஸ்... மேலும் பார்க்க

வேளாண் விரிவாக்க மையத்தில் இருசக்கர வாகனம் நிறுத்தம் அமைக்கக் கோரிக்கை

போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வேளாண்மை விரிவாக்க மையத்தில் வாகனம் நிறுத்தம் அமைக்கவேண்டும் என விவசாயிகள், அலுவலா்கள் கோரிக்கை விடுத்தனா். போளூரில் வசூா் ஊராட்சியில் வேலூா் - திருவண்ணாமலை சாலை... மேலும் பார்க்க

சிவாலயங்களில் ஆனி மாத பிரதோஷ வழிபாடு

ஆரணி/செய்யாறு/வந்தவாசி: திருவண்ணாமலை, செய்யாறு, வந்தாவசி, ஆரணி, இஞ்சிமேடு, சேத்துப்பட்டு ஆகிய இடங்களில் உள்ள சிவாலயங்களில் ஆனி மாத தேய்பிறை பிரதோஷம் திங்கள்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வர... மேலும் பார்க்க