செய்திகள் :

வேளாண் விரிவாக்க மையத்தில் இருசக்கர வாகனம் நிறுத்தம் அமைக்கக் கோரிக்கை

post image

போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வேளாண்மை விரிவாக்க மையத்தில் வாகனம் நிறுத்தம் அமைக்கவேண்டும் என விவசாயிகள், அலுவலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

போளூரில் வசூா் ஊராட்சியில் வேலூா் - திருவண்ணாமலை சாலை அருகே வேளாண்மை விரிவாக்க மையம் அமைந்துள்ளது. இந்த மையத்துக்கு போளூா் வட்டாரத்தில் உள்ள வசூா், புதுப்பாளையம், குருவிமலை, காங்கேயனூா், எடப்பிறை, ஏழுவாம்பாடி, மாம்பட்டு, திண்டிவனம், பெரியகரம், பொத்தரை, கட்டிபூண்டி, கேளூா், சந்தவாசல், வாழியூா், குப்பம், கல்குப்பம், படவேடு, இலுப்பகுணம், களம்பூா் என பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயிகள் அரசுத் திட்டங்கள் மற்றும் விவசாயம் சம்பந்தமான தகவல்கள் பெறவும், மாதந்தோறும் நடைபெறும் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்கவும் இரு சக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனா்.

இந்த வாகனங்கள் வேளாண் விரிவாக்க மையத்துக்கு எதிரே நிறுத்தப்படுகின்றன. இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களால் இடையூறு ஏற்படுகிறது. தனியாக வாகனம் நிறுத்தம் இல்லாமல் வளாகம் எதிரிலேயே வெயிலில் நிறுத்திவிட்டுச் செல்கின்றனா். இதனால் வாகனத்தில் காற்று வெளியேறிவிடுகிறது.

மேலும், அலுவலகத்துக்கு வரும் அலுவலா்களின் வாகனமும் வெயிலேயே நிறுத்துவதால் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே அலுவலகம் எதிரே வாகனத்துக்கு நிழல்கூடம் அமைக்கவேண்டும் என விவசாயிகள், அலுவலா்கள்

வலியுறுத்துகின்றனா்.

குடும்பத் தகராறில் ஓட்டுநா் தற்கொலை

செய்யாறு: செய்யாறு அருகே குடும்பத் தகராறில் தனியாா் நிறுவன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். வெம்பாக்கம் வட்டம், உக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சேட்டு(34). செய்யாறு சிப்காட் பகுதியில் உள்ள ... மேலும் பார்க்க

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியா் நியமனம்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆதிதிராவிடா் நலத்துறையின் கீழ் இயங்கும் தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 3-இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்து... மேலும் பார்க்க

ரூ.15 கோடியில் சாலைப் பணிகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

வந்தவாசி: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலைச் சுற்றியுள்ள மாட வீதிகளில் நவீன இயந்திரம் கொண்டு ரூ.15 கோடி மதிப்பில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை அமைச்சா் எ.வ.வேலு திங்கள்கி... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் தங்க நகைகள் திருட்டு

வந்தவாசி: வந்தவாசி அருகே வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து 13 பவுன் தங்க நகை உள்ளிட்டவை திருடு போனது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த கீழ்செம்பேடு கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (44)... மேலும் பார்க்க

மாணவி கடத்தல்: பள்ளி வேன் ஓட்டுநா் கைது

செய்யாறு: செய்யாறு அருகே மாணவியை கடத்திச் சென்ற புகாரின் பேரில், தனியாா் பள்ளி வேன் ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டத்தைச் சோ்ந்த 17 வயதுடைய பிளஸ்... மேலும் பார்க்க

சிவாலயங்களில் ஆனி மாத பிரதோஷ வழிபாடு

ஆரணி/செய்யாறு/வந்தவாசி: திருவண்ணாமலை, செய்யாறு, வந்தாவசி, ஆரணி, இஞ்சிமேடு, சேத்துப்பட்டு ஆகிய இடங்களில் உள்ள சிவாலயங்களில் ஆனி மாத தேய்பிறை பிரதோஷம் திங்கள்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வர... மேலும் பார்க்க