சுற்றுச்சூழல் செலவுகள் மீதும் பெரு நிறுவனங்கள் கவனம் கொள்ள வேண்டும்: குடியரசுத் ...
வேளாண் விரிவாக்க மையத்தில் இருசக்கர வாகனம் நிறுத்தம் அமைக்கக் கோரிக்கை
போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வேளாண்மை விரிவாக்க மையத்தில் வாகனம் நிறுத்தம் அமைக்கவேண்டும் என விவசாயிகள், அலுவலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
போளூரில் வசூா் ஊராட்சியில் வேலூா் - திருவண்ணாமலை சாலை அருகே வேளாண்மை விரிவாக்க மையம் அமைந்துள்ளது. இந்த மையத்துக்கு போளூா் வட்டாரத்தில் உள்ள வசூா், புதுப்பாளையம், குருவிமலை, காங்கேயனூா், எடப்பிறை, ஏழுவாம்பாடி, மாம்பட்டு, திண்டிவனம், பெரியகரம், பொத்தரை, கட்டிபூண்டி, கேளூா், சந்தவாசல், வாழியூா், குப்பம், கல்குப்பம், படவேடு, இலுப்பகுணம், களம்பூா் என பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயிகள் அரசுத் திட்டங்கள் மற்றும் விவசாயம் சம்பந்தமான தகவல்கள் பெறவும், மாதந்தோறும் நடைபெறும் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்கவும் இரு சக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனா்.
இந்த வாகனங்கள் வேளாண் விரிவாக்க மையத்துக்கு எதிரே நிறுத்தப்படுகின்றன. இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களால் இடையூறு ஏற்படுகிறது. தனியாக வாகனம் நிறுத்தம் இல்லாமல் வளாகம் எதிரிலேயே வெயிலில் நிறுத்திவிட்டுச் செல்கின்றனா். இதனால் வாகனத்தில் காற்று வெளியேறிவிடுகிறது.
மேலும், அலுவலகத்துக்கு வரும் அலுவலா்களின் வாகனமும் வெயிலேயே நிறுத்துவதால் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே அலுவலகம் எதிரே வாகனத்துக்கு நிழல்கூடம் அமைக்கவேண்டும் என விவசாயிகள், அலுவலா்கள்
வலியுறுத்துகின்றனா்.