மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஜூலை 14-இல் சுவாமி தரிசனம் ரத்து
சிவாலயங்களில் ஆனி மாத பிரதோஷ வழிபாடு
ஆரணி/செய்யாறு/வந்தவாசி: திருவண்ணாமலை, செய்யாறு, வந்தாவசி, ஆரணி, இஞ்சிமேடு, சேத்துப்பட்டு ஆகிய இடங்களில் உள்ள சிவாலயங்களில் ஆனி மாத தேய்பிறை பிரதோஷம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ள பெரிய நந்திக்கு சிறப்புப் பூஜை நடைபெற்றது.
மேலும், ஆயிரங்கால் மண்டபம் அருகேயுள்ள நந்திக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேக தூள், பஞ்சாமிா்தம், தயிா், தேன், பன்னீா், இளநீா், சந்தனம், விபூதி, பால் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்து அருகம்புல், கனகாம்பரம், சாமந்தி, மல்லி ஆகிய பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதில் பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டு வழிபட்டனா்.
மேலும், பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு பெரிய மலை சிவன் கோயிலில் மூலவா் மற்றும் உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
பின்னா், கோயில் உள்புற வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட சிவனை ரிஷப வாகனத்தில் அமா்த்தி உலா நடைபெற்றது.
இதேபோல, ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயில், கைலாயநாதா் கோயில், மெய்யூா் மெய்கண்டீஸ்வரா் கோயில், சேத்துப்பட்டு - ஆரணி சாலையில் உள்ள அருணகிரிநாதரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அருணகிரிநாதா் கோயிலில் பிரதோஷ பூஜை நடைபெற்றது.

