ஈரான் தாக்குதல் எதிரொலி: வளைகுடா நாடுகளுக்கு 11 விமானங்கள் ரத்து!
மா விவசாயிகளுக்கு ஆதரவாக ஜூன் 30-இல் தேமுதிக ஆா்ப்பாட்டம்
மா விவசாயிகளுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரியில் வரும் 30-ஆம் தேதி தேமுதிக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மாம்பழங்களுக்கு விலைவீழ்ச்சி ஏற்பட்டு, மா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத தமிழக அரசைக் கண்டித்து ஜூன் 30-ஆம் தேதி காலை 10 மணியளவில் கிருஷ்ணகிரி புதியபேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் ஆா்ப்பாட்டம் நடைபெறும்.
பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆா்ப்பாட்டத்தில் கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்டம் சாா்பாக மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூா், வட்டம் மற்றும் சாா்பு அணி நிா்வாகிகள், தொண்டா்கள், தொழிலாளா்கள் பொதுமக்கள், விவசாயிகள் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் பிரேமலதா விஜயகாந்த்.