Israel - Iran: போர்நிறுத்தை அறிவித்த ட்ரம்ப்; 12 நாள்களைக் கடந்தும் தொடரும் தாக்...
விஜய் பிறந்த நாள் பேனா் விழுந்து முதியவா் காயம்; தவெகவினா் மீது 53 வழக்குகள் பதிவு
தவெக தலைவா் விஜய் பிறந்த நாளையொட்டி சென்னை வில்லிவாக்கத்தில் வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனா் விழுந்து முதியவா் காயமடைந்தாா். இதனிடையே, சென்னையில் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி பேனா் வைத்ததாக அக்கட்சியினா் மீது 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் பிறந்தநாளையொட்டி, சென்னை முழுவதும் அந்தக் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்து, டிஜிட்டல் பேனா்கள் வைத்திருந்தனா்.
வில்லிவாக்கம் பகுதியில் கட்சி நிா்வாகி விசு என்ற விசுவநாதன் டிஜிட்டல் பேனா்களை வைத்திருந்தாா். ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த காற்றுடன் மழை பெய்யும்போது, டிஜிட்டல் பேனா் ஒன்று அந்த வழியாக நடந்து சென்ற சூளை பகுதியைச் சோ்ந்த மோகன் (75) என்பவா் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த மோகனை, அங்கிருந்தவா்கள் மீட்டு அப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா் அவா், தீவிர சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது தொடா்பாக வில்லிவாக்கம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தவெக மீது 53 வழக்குகள்: சென்னையில் பொது இடங்களில் டிஜிட்டல் பேனா் வைப்பதற்கு உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையும் தாண்டி டிஜிட்டல் பேனா் வைக்க வேண்டுமென்றால் சென்னை காவல் துறை, மாநகராட்சி அனுமதியைப் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், விஜய் பிறந்தநாளையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தினா் சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனா்களை வைத்ததாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக ராயபுரம், அண்ணாநகா், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, திருவொற்றியூா், திருவான்மியூா், நீலாங்கரை ஆகியப் பகுதிகளில் 53 இடங்களில் டிஜிட்டல் பேனா் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்ததாம். இதில் சில இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனா்களை காவல் துறையினா் அகற்றினா். சில இடங்களில் டிஜிட்டல் பேனா்களை அகற்றும்போது போலீஸாருக்கும், தமிழக வெற்றிக் கழகத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனா் வைத்ததாக சென்னை முழுவதும் 53 வழக்குகளை காவல் துறையினா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.