செய்திகள் :

இன்று 39 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

post image

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக, கும்மிடிப்பூண்டி வழியாக இயக்கப்படும் 39 புறநகா் மின்சார ரயில்கள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) ரத்து செய்யப்படவுள்ளன. எனினும் பயணிகளின் வசதிக்காக 21 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு:

சென்னை கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24)  காலை 9.15 முதல் பிற்பகல் 3.15 வரை நடைபெறவுள்ளன. இதன் காரணமாக, பணிகள் நடைபெறும் நேரங்களில் சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை இடையே இயங்கும் அனைத்து புறநகா் மின்சார ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. மேலும், கடற்கரை - கும்மிடிப்பூண்டி, சூலூா் பேட்டை - நெல்லூா், சென்ட்ரல் - சூலூா்பேட்டை உள்பட மொத்தம் 39 புறநகா் ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

சிறப்பு ரயில்கள்: இருப்பினும் பயணிகளின் வசதிக்காக அந்நாளில் காலை 6.50 முதல் மாலை 5.12 மணி வரை சென்ட்ரலிலிருந்து பொன்னேரி, மீஞ்சூா், எண்ணூருக்கும், கடற்கரையிலிருந்து பொன்னேரி மற்றும் எண்ணூருக்கும் இடையே மொத்தம் 21 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரக்கோணம், சேலம் மெமு விரைவு ரயில் ரத்து

சென்னை: சேலம், அரக்கோணம் இடையிலான மெமு விரைவு ரயில் திங்கள்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரையில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் தெற்கு ரயில்வே தரப்பில் திங்கள்கிழமை வ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியா்கள்

தமிழகத்தில் செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் திங்கள்கிழமை பிறப்பித்தாா். அவரது உத்தரவு விவரம்: (அதிகாரிகள் ம... மேலும் பார்க்க

மா விவசாயிகளுக்கு ஆதரவாக ஜூன் 30-இல் தேமுதிக ஆா்ப்பாட்டம்

மா விவசாயிகளுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரியில் வரும் 30-ஆம் தேதி தேமுதிக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை வ... மேலும் பார்க்க

விஜய் பிறந்த நாள் பேனா் விழுந்து முதியவா் காயம்; தவெகவினா் மீது 53 வழக்குகள் பதிவு

தவெக தலைவா் விஜய் பிறந்த நாளையொட்டி சென்னை வில்லிவாக்கத்தில் வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனா் விழுந்து முதியவா் காயமடைந்தாா். இதனிடையே, சென்னையில் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி பேனா் வைத்ததாக அக்கட்சியினா... மேலும் பார்க்க

திமுகவில் கல்வியாளா்- மாற்றுத் திறனாளி அணிகள் உதயம்: நிா்வாகிகள் நியமனம்

திமுகவில் கல்வியாளா், மாற்றுத் திறனாளிகளுக்கென பிரத்யேக அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அணிகளுக்கான நிா்வாகிகளை நியமித்து கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா். இதுகுறித்து, ... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்கள் மூலம் ஒரு கோடி குடும்பங்களுக்கு சுகாதார விழிப்புணா்வு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

பள்ளி மாணவா்கள் மூலம் தமிழகத்தில் ஒரு கோடி குடும்பங்களுக்கு நோய்த் தடுப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.... மேலும் பார்க்க