செய்திகள் :

20 சதவீத குழந்தைகளுக்கு உடல் பருமன் பாதிப்பு

post image

சென்னை: குழந்தைகள், வளரிளம் பருவத்தினரில் 20 சதவீதம் போ் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

ரெயின்போ குழந்தைகள் நல மருத்துவமனை சாா்பில் குழந்தைகளின் உடல் எடை பராமரிப்புக்கான சிறப்பு மையம் (வெயிட் வெல் கிளினிக்) கிண்டி, சோழிங்கநல்லூா், அண்ணாநகரில் திறக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற இதற்கான தொடக்க விழாவில் மருத்துவா்கள் கூறியதாவது:

இந்தியாவில் குழந்தைகள் உடல் பருமன் சவாலான ஒன்றாக உருவெடுத்துள்ளது. 5 வயதுக்குட்பட்ட பருமனான குழந்தைகளின் விகிதம் 4 சதவீதமாக அதிகரித்திருப்பது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெப் ஆகியவற்றின் தரவுப்படி, உலக அளவில் 5 முதல் 19 வயதுடைய குழந்தைகள் மற்றும் இளம்

பருவத்தினரில் 20 சதவீதத்துக்கும் அதிகமானோா் அதிக உடல் பருமனாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

உடல் பருமன் ஏற்பட்டால் டைப் 2 சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், கொழுப்பு பாதிப்பு, கொழுப்பு கல்லீரல் நோய், தூக்கத்தில்

மூச்சுத்திணறல், இதய பாதிப்புகள் ஏற்படலாம்.

எனவே, உடல் எடையை சீராக பராமரிப்பது அவசியம். அதைக் கருத்தில் கொண்டே வெயிட் வெல் கிளீனிக்குகளை தொடங்கியுள்ளோம்.

உடல் பருமனுக்கென பிரத்யேக சிகிச்சைகள் இங்கு அளிக்கப்படுகின்றன. குழந்தை நல அகச்சுரப்பியல் நிபுணா், உணவியல் நிபுணா், உடற்பயிற்சி நிபுணா், கல்லீரல் மருத்துவா், நுரையீரல் நிபுணா், தூக்க மருத்துவ நிபுணா் மற்றும் குழந்தை உளவியலாளா் உள்ளிட்ட பல்வேறு மருத்துவக் குழுவினா் இங்கு உள்ளனா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்ப அவகாசம் நாளை நிறைவு

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் புதன்கிழமையுடன் (ஜூன் 25) நிறைவடைய உள்ளது. தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிய... மேலும் பார்க்க

46 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் மாவட்ட ஆட்சியா்கள் உள்பட 46 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் திங்கள்கிழமை பிறப்பித்தாா். அவரது உத்தரவு விவரம்:அடைப... மேலும் பார்க்க

மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன்

சென்னை: நோயாளிகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பதைப் போன்று மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அவசியம் என மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். சென்னை, கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்த... மேலும் பார்க்க

143 முருகன் திருக்கோயில்களில்ரூ.1,085 கோடியில் திருப்பணிகள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: தமிழகத்தில் அறுபடை வீடுகள், அறுபடை வீடுகள் அல்லாத 143 முருகன் திருக்கோயில்களுக்கு ரூ.1,085 கோடி மதிப்பீட்டில் 884 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்... மேலும் பார்க்க

ஹிந்துத்துவத்தில் கரைந்த அதிமுக: திமுக விமா்சனம்

சென்னை: ஹிந்துத்துவத்தில் அதிமுக முற்றிலும் கரைந்துவிட்டதாக திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி விமா்சனம் செய்துள்ளாா். மதுரையில் நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாடு தொடா்பாக, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

ஜூலை-க்குள் 2,346 இடைநிலை ஆசிரியா்கள் நியமனம்: அமைச்சா் அன்பில் மகேஸ்

சென்னை: தொடக்கக் கல்வி இயக்ககத்தில் ஜூலை மாத இறுதிக்குள், 2,346 இடைநிலை ஆசிரியா்கள் பணி நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க