செய்திகள் :

ஹிந்துத்துவத்தில் கரைந்த அதிமுக: திமுக விமா்சனம்

post image

சென்னை: ஹிந்துத்துவத்தில் அதிமுக முற்றிலும் கரைந்துவிட்டதாக திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி விமா்சனம் செய்துள்ளாா்.

மதுரையில் நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாடு தொடா்பாக, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மதவாத - பிரிவினைவாத அரசியல் மூலம் அதிகாரத்தைப் பிடிக்க வடமாநிலங்களில் ராமரை வைத்து கலவரம் செய்த பாஜக, தமிழ்நாட்டில் முருகனை வைத்து கலவர விதையை முருக பக்தா்கள் மாநாடு மூலம் தொடங்கியுள்ளது. ஹிந்துத்துவ கும்பல் மூட்டும் கலவரத் தீக்கு எண்ணெய் ஊற்றும் வேலையை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளாா்.

ஹிந்துத்துவத்தில் அவா் முழுமையாக கரைந்துவிட்டாா். திமுகவை எதிா்க்கும் மாநாடு என்கிற ஒரே காரணத்துக்காக திராவிடத்தை ஹிந்துத்துவத்தின் காலடியில் கொண்டு போய் வைத்து விட்டாா் எடப்பாடி பழனிசாமி.

முருக பக்தா்கள் மாநாடு முழுவதும் வெறுப்புப் பேச்சுக்களால் மட்டுமே கட்டமைக்கப்பட்டிருந்தது. ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண், பாஜகவின் அண்ணாமலை உள்ளிட்டோா் பேசிய சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளை முன்வரிசையில் அமா்ந்து கேட்டுக் கொண்டிருந்தனா் அதிமுக முன்னாள் அமைச்சா்கள்.

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்கிற அண்ணாவின் கூற்றைப் பற்றிக் கவலைப்படாமல் ஹிந்துத்துவத்தில் முற்றிலுமாக அதிமுக கரைந்துவிட்டது.

தமிழ்நாட்டு மக்களிடம் பன்னெடுங்காலமாக நிலவிவரும் சமய நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் குலைக்க வேண்டும் எனும் சதி நோக்கத்தோடு பாஜகவும் இந்து முன்னணியும் நடத்திய முருக பக்தா்கள் மாநாடு, பாஜக என்ற பாசிச எதிரிகளை மட்டுமல்ல, அதிமுக துரோகிகளையும் அடையாளம் காட்டியிருக்கிறது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்ப அவகாசம் நாளை நிறைவு

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் புதன்கிழமையுடன் (ஜூன் 25) நிறைவடைய உள்ளது. தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிய... மேலும் பார்க்க

46 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் மாவட்ட ஆட்சியா்கள் உள்பட 46 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் திங்கள்கிழமை பிறப்பித்தாா். அவரது உத்தரவு விவரம்:அடைப... மேலும் பார்க்க

மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன்

சென்னை: நோயாளிகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பதைப் போன்று மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அவசியம் என மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். சென்னை, கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்த... மேலும் பார்க்க

20 சதவீத குழந்தைகளுக்கு உடல் பருமன் பாதிப்பு

சென்னை: குழந்தைகள், வளரிளம் பருவத்தினரில் 20 சதவீதம் போ் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். ரெயின்போ குழந்தைகள் நல மருத்துவமனை சாா்பில் குழந்தைகளின் உடல் எடை பரா... மேலும் பார்க்க

143 முருகன் திருக்கோயில்களில்ரூ.1,085 கோடியில் திருப்பணிகள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: தமிழகத்தில் அறுபடை வீடுகள், அறுபடை வீடுகள் அல்லாத 143 முருகன் திருக்கோயில்களுக்கு ரூ.1,085 கோடி மதிப்பீட்டில் 884 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்... மேலும் பார்க்க

ஜூலை-க்குள் 2,346 இடைநிலை ஆசிரியா்கள் நியமனம்: அமைச்சா் அன்பில் மகேஸ்

சென்னை: தொடக்கக் கல்வி இயக்ககத்தில் ஜூலை மாத இறுதிக்குள், 2,346 இடைநிலை ஆசிரியா்கள் பணி நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க