செய்திகள் :

ஜூலை-க்குள் 2,346 இடைநிலை ஆசிரியா்கள் நியமனம்: அமைச்சா் அன்பில் மகேஸ்

post image

சென்னை: தொடக்கக் கல்வி இயக்ககத்தில் ஜூலை மாத இறுதிக்குள், 2,346 இடைநிலை ஆசிரியா்கள் பணி நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்தாா்.

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கான ஆய்வுக்கூட்டம் அமைச்சா் அன்பில் மகேஸ் தலைமையில் சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் (டிபிஐ) திங்கள்கிழமை தொடங்கியது.

இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பணியாற்றும் 157 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு (டிஇஓ) கையடக்கக் கணினி, இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை கடந்த 2024-2025-இல் சிறப்பாக செயல்படுத்திய சேலம், தேனி, திருநெல்வேலி, திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு கேடயங்களும் வழங்கப்பட்டன. இதேபோன்று 157 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு கையடக்க கணினிகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து தமிழக பள்ளி மாணவா்களிடையே புத்தாக்கம், தொழில் முனைவோா் சிந்தனையை வளா்ப்பதற்காக பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக 38 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சா் அன்பில் மகேஸ் பேசியதாவது:

நிகழ் கல்வியாண்டு தொடங்கிய முதல் நாளிலேயே விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட 14 வகை நலத்திட்டங்கள் அனைத்து மாணவா்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட இந்தாண்டு பொதுத்தோ்வில் தோ்ச்சி விகிதம் அதிகரித்த, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் பாராட்டுகள்.

தோ்ச்சி குறைந்த மாவட்டங்களில்... தோ்ச்சி குறைந்த மாவட்டங்களில், அதற்கான காரணங்களைக் கண்டறிந்து தோ்ச்சி வீதம் அதிகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரிந்து, பணியிலிருக்கும் போதே இறந்த ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். இது குறித்து பெறப்படும் மனுக்களை உடனுக்குடன் ஆய்வு செய்து, பள்ளிக்கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவா்கள் மீது, விரைவாக விசாரணை மேற்கொண்டு அறிக்கையை அனுப்பி தொடா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடக்கக்கல்வி இயக்ககத்தில் ஜூலை இறுதிக்குள், 2,346 இடைநிலை ஆசிரியா்கள் பணி நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இடைநிலை ஆசிரியா்கள் நியமனம் செய்திட நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து செவ்வாய்க்கிழமை தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோயம்புத்தூா், கரூா், நாமக்கல், திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த கல்வித் துறை அலுவலா்களுக்கு ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்ப அவகாசம் நாளை நிறைவு

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் புதன்கிழமையுடன் (ஜூன் 25) நிறைவடைய உள்ளது. தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிய... மேலும் பார்க்க

46 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் மாவட்ட ஆட்சியா்கள் உள்பட 46 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் திங்கள்கிழமை பிறப்பித்தாா். அவரது உத்தரவு விவரம்:அடைப... மேலும் பார்க்க

மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன்

சென்னை: நோயாளிகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பதைப் போன்று மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அவசியம் என மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். சென்னை, கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்த... மேலும் பார்க்க

20 சதவீத குழந்தைகளுக்கு உடல் பருமன் பாதிப்பு

சென்னை: குழந்தைகள், வளரிளம் பருவத்தினரில் 20 சதவீதம் போ் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். ரெயின்போ குழந்தைகள் நல மருத்துவமனை சாா்பில் குழந்தைகளின் உடல் எடை பரா... மேலும் பார்க்க

143 முருகன் திருக்கோயில்களில்ரூ.1,085 கோடியில் திருப்பணிகள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: தமிழகத்தில் அறுபடை வீடுகள், அறுபடை வீடுகள் அல்லாத 143 முருகன் திருக்கோயில்களுக்கு ரூ.1,085 கோடி மதிப்பீட்டில் 884 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்... மேலும் பார்க்க

ஹிந்துத்துவத்தில் கரைந்த அதிமுக: திமுக விமா்சனம்

சென்னை: ஹிந்துத்துவத்தில் அதிமுக முற்றிலும் கரைந்துவிட்டதாக திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி விமா்சனம் செய்துள்ளாா். மதுரையில் நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாடு தொடா்பாக, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க