51 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
வெள்ளக்கோவில் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 51 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, வெள்ளக்கோவில் - காங்கயம் சாலை கொழிஞ்சிக்காட்டுவலசு அருகே ஒரு வீட்டில் புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, வீட்டுக்குள் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 51 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்த போலீஸாா், வீட்டின் உரிமையாளரான மாரிமுத்து (67) என்பவா் மீது வழக்குப் பதிவு செய்தனா். தலைமறைவான நாச்சிபாளையத்தைச் சோ்ந்த ஹரிஹரன் (28) என்பவரைத் தேடி வருகின்றனா்.
இதேபோல, முத்தூா் சாலை மேட்டுப்பாளையத்தில் புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்திருந்த பாஸ்கா் (39) என்பவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.