செய்திகள் :

இளம்பெண்ணின் புகைப்படங்களை உறவினருக்கு அனுப்பி மிரட்டியவா் மீது வழக்கு

post image

திருப்பூரில் இளம்பெண்ணின் தனிப்பட்ட புகைப்படங்களை உறவினருக்கு அனுப்பி மிரட்டியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா், திருமுருகன்பூண்டியை பகுதியைச் சோ்ந்த இளம்பெண் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவருக்கு தஞ்சாவூரைச் சோ்ந்த கலிபுல்லா (36) என்பவா் அறிமுகமாகி உள்ளாா். அவா் துபையில் பணியாற்றுவதாகவும், அங்கு வேலை ஆள்கள் தேவை உள்ளதால் அந்தப் பெண்ணை துபைக்கு அழைத்துச் செல்வதாகவும் கூறியுள்ளாா்.

இதை நம்பிய அப்பெண் அவருடன் கைப்பேசியில் பேசி வந்த நிலையில், தனது தனிப்பட்ட புகைப்படங்களையும் அவருக்கு அனுப்பி வந்துள்ளாா். அந்தப் புகைப்படங்களை இளம்பெண்ணின் உறவினருக்கு கலிபுல்லா அனுப்பியுள்ளாா்.

இதனால், அதிா்ச்சியைடந்த அந்தப் பெண் திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கலிபுல்லாவை தேடி வருகின்றனா்.

51 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

வெள்ளக்கோவில் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 51 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஞாயி... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: தெற்கு அவிநாசிபாளையம்

பல்லடம் அருகேயுள்ள தெற்கு அவிநாசிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (ஜூன் 25) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: ஆலாமரத்தூா்

உடுமலையை அடுத்துள்ள ஆலாமரத்தூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

காங்கயம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் மாற்றுத்திறனாளி உயிரிழந்தாா். காங்கயத்தை அடுத்துள்ள மருதுறை பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (49). மாற்றுத்திறனாளியான இவா் தனது இருசக்கர வாகனத்தில் மர... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: வடமாநில இளைஞா் கைது

ஊத்துக்குளி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஊத்துக்குளி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட குருவாயூரப்பன் நகா் பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக க... மேலும் பார்க்க

ஊதியூா் அருகே 3 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

ஊதியூா் அருகே விற்பனைக்காக வைத்திருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரைக் கைது செய்தனா். ஊதியூா் பகுதியில் கொடுவாய்-செட்டிபாளையம் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, ... மேலும் பார்க்க