பாகிஸ்தானுக்கு உளவு: ராணுவ வீரா், கூட்டாளி கைது: பஞ்சாப் காவல் துறை நடவடிக்கை
ஊதியூா் அருகே 3 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது
ஊதியூா் அருகே விற்பனைக்காக வைத்திருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரைக் கைது செய்தனா்.
ஊதியூா் பகுதியில் கொடுவாய்-செட்டிபாளையம் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரணை செய்ததில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த பாண்டிமுருகன் (45) என்பதும், அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது அதில் 3 கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 3 கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.