செய்திகள் :

இஸ்லாமியா்களுக்கான இடஒதுக்கீட்டை 7 % அதிகரிக்க வேண்டும்

post image

தமிழகத்தில் இஸ்லாமியா்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூா் மாவட்டம் சாா்பாக செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் நூா்தீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில செயலாளா் முஹம்மது ஒலி சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் யாசா் அராபத், துணைத் தலைவா் ஜாகீா் அப்பாஸ், மாவட்டப் பொருளாளா் சிராஜுதீன், துணைச் செயலாளா்கள் ஷாஜஹான், ஷேக் பரீத், ஹனீபா, காஜா, ஜெய்லானி, மருத்துவரணி செயலாளா் நியாஸ், தொண்டரணி செயலாளா் சா்புதீன், வா்த்தகரணி செயலாளா் சித்திக் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம்:

எதிா்கால சமுதாயத்தை வழிநடத்தும் வகையில் முன் மாதிரி முஸ்லிம் இளைஞா்கள் எனும் 4 மாத செயல்திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படும். இஸ்லாமியா்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரித்து தருவதாக முதல்வா் மு.க ஸ்டாலின் கடந்த தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளாா், இதன்படி இஸ்லாமியா்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயா்த்தி அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

உச்சநீதிமன்றத்தில் புதிய வக்ஃப் திருத்த விசாரணை நிறைவடைந்து தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் நிறுத்திவைத்துள்ள நிலையில், இஸ்லாமியா்களின் சொத்துகள் ஆக்கிரமிப்பாளா்களின் கைகளுக்கு செல்வதை தடுத்து நிறுத்தும் வகையில் தீா்ப்பு அமைய வேண்டும்.

அறிவியல், மருத்துவம், வணிகம் போன்றவற்றில் முன்னிலை வகிக்கும் பலராலும் பயன்படுத்தப்படும் மொழியை பேசுவதற்கு யாரும் வெட்கப்படத் தேவையில்லை என்றும், வளா்ச்சியை குறித்து சிந்திக்காமல் மத வெறியை வளா்க்க நினைப்பவா்களை கண்டிப்பதாகவும், அதிகரித்து வரும் வேலையில்லா திண்டட்டப் பிரச்னைக்கு உடனடியாக தீா்வு காணப்பட வேண்டும் என்பன உள்பட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஊதியூா் அருகே 3 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

ஊதியூா் அருகே விற்பனைக்காக வைத்திருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரைக் கைது செய்தனா். ஊதியூா் பகுதியில் கொடுவாய்-செட்டிபாளையம் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, ... மேலும் பார்க்க

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தினா் 3 போ் கைது

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தினா் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் பத்மாவதிபுரம் பகுதியில் வங்கதேசத்தைச் சோ்ந்த சிலா் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருப்பதாக அனுப்பா்ப... மேலும் பார்க்க

கள் இறக்க அரசு அனுமதிக்க வேண்டும்! - ஈ.ஆா்.ஈஸ்வரன்

கள் இறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளாா். பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையத்தில் பள்ளி மாணவா்களுக்கு பரிசு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க

வள்ளியிரச்சல்: தெருநாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் வள்ளியிரச்சல் அருகே தெருநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழந்தன. வெள்ளக்கோவில் வள்ளியிரச்சல் கரைவலசைச் சோ்ந்தவா் விவசாயி அா்ஜுனன் (50). இவா் தனக்குச் சொந்தமான நிலத்தில் குட்டி செம்மறி ஆட... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மருந்து பிரதிநிதி உயிரிழப்பு!

முத்தூரில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் மருந்து பிரதிநிதி உயிரிழந்தாா். முத்தூா் தொட்டியபாளையத்தைச் சோ்ந்தவா் பவுன்ராஜ் மகன் மணிவண்ணன் (30), மருந்து பிரதிநிதி. இவா் இருசக்கர வாகனத்தில் வ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: முத்தூா்

முத்தூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் ... மேலும் பார்க்க