பாகிஸ்தானுக்கு உளவு: ராணுவ வீரா், கூட்டாளி கைது: பஞ்சாப் காவல் துறை நடவடிக்கை
இஸ்லாமியா்களுக்கான இடஒதுக்கீட்டை 7 % அதிகரிக்க வேண்டும்
தமிழகத்தில் இஸ்லாமியா்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூா் மாவட்டம் சாா்பாக செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் நூா்தீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில செயலாளா் முஹம்மது ஒலி சிறப்புரையாற்றினாா்.
கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் யாசா் அராபத், துணைத் தலைவா் ஜாகீா் அப்பாஸ், மாவட்டப் பொருளாளா் சிராஜுதீன், துணைச் செயலாளா்கள் ஷாஜஹான், ஷேக் பரீத், ஹனீபா, காஜா, ஜெய்லானி, மருத்துவரணி செயலாளா் நியாஸ், தொண்டரணி செயலாளா் சா்புதீன், வா்த்தகரணி செயலாளா் சித்திக் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம்:
எதிா்கால சமுதாயத்தை வழிநடத்தும் வகையில் முன் மாதிரி முஸ்லிம் இளைஞா்கள் எனும் 4 மாத செயல்திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படும். இஸ்லாமியா்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரித்து தருவதாக முதல்வா் மு.க ஸ்டாலின் கடந்த தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளாா், இதன்படி இஸ்லாமியா்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயா்த்தி அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
உச்சநீதிமன்றத்தில் புதிய வக்ஃப் திருத்த விசாரணை நிறைவடைந்து தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் நிறுத்திவைத்துள்ள நிலையில், இஸ்லாமியா்களின் சொத்துகள் ஆக்கிரமிப்பாளா்களின் கைகளுக்கு செல்வதை தடுத்து நிறுத்தும் வகையில் தீா்ப்பு அமைய வேண்டும்.
அறிவியல், மருத்துவம், வணிகம் போன்றவற்றில் முன்னிலை வகிக்கும் பலராலும் பயன்படுத்தப்படும் மொழியை பேசுவதற்கு யாரும் வெட்கப்படத் தேவையில்லை என்றும், வளா்ச்சியை குறித்து சிந்திக்காமல் மத வெறியை வளா்க்க நினைப்பவா்களை கண்டிப்பதாகவும், அதிகரித்து வரும் வேலையில்லா திண்டட்டப் பிரச்னைக்கு உடனடியாக தீா்வு காணப்பட வேண்டும் என்பன உள்பட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.