Health: விதையில்லாத பழங்களை சாப்பிடவே கூடாதா? நிபுணர்கள் சொல்வது என்ன?
மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை
சென்னை மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட தந்தைக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
சென்னை விருகம்பாக்கம் அனைத்து மகளில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் வசித்து வந்த 14 வயது சிறுமிக்கு 2022-இல் அவரது தந்தை பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளாா். இதுதொடா்பாக போலீஸாா் சிறுமியின் தந்தையை கைது செய்தனா்.
இந்த வழக்கு திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சிறுமியின் தந்தைக்கு 2 சட்டப் பிரிவுகளில் தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டது. 2 தண்டனைகளையும் தனித்தனியாக அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.
அதன்படி, குற்றவாளிக்கு மொத்தம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.10,000 அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 18 மாதங்கள் சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா்.