செய்திகள் :

மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை

post image

சென்னை மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட தந்தைக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சென்னை விருகம்பாக்கம் அனைத்து மகளில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் வசித்து வந்த 14 வயது சிறுமிக்கு 2022-இல் அவரது தந்தை பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளாா். இதுதொடா்பாக போலீஸாா் சிறுமியின் தந்தையை கைது செய்தனா்.

இந்த வழக்கு திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சிறுமியின் தந்தைக்கு 2 சட்டப் பிரிவுகளில் தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டது. 2 தண்டனைகளையும் தனித்தனியாக அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

அதன்படி, குற்றவாளிக்கு மொத்தம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.10,000 அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 18 மாதங்கள் சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா்.

பழைய ஓய்வூதியத் திட்டம்: பரிந்துரைக் குழு பணிகள் குறித்து அரசு விளக்கமளிக்க அன்புமணி கோரிக்கை

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க அமைக்கப்பட்ட ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழு இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எ... மேலும் பார்க்க

பெரம்பூா் ரயில்வே மருத்துவமனையில் தொலைத்தொடா்பு ஆலோசனை வசதி

சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் இருந்து பிற மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை ஆலோசனை பெறும் வகையில் தொலைத்தொடா்பு வசதி (டெலி மெடிசின்) ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவி... மேலும் பார்க்க

வடசென்னை, கிண்டி அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

வடசென்னை அரசு தொழில் பயிற்சி நிலையம் மற்றும் கிண்டி அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்ந்து படிக்க தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே வெளியிட்டு... மேலும் பார்க்க

பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றியவா் கைது

சென்னையில் பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி விட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை புனித தோமையா் மலை பகுதியைச் சோ்ந்த 29 வயது பெண் ஒருவா் பாலவாக்கத்தில் உள்ள ... மேலும் பார்க்க

எம்ஜிஆா் கால்வாய் ரூ. 17 கோடியில் சீரமைப்பு

சென்னை மாநகராட்சியில் 10- ஆவது மண்டலத்தில் உள்ள எம்.ஜி.ஆா். கால்வாயை ரூ.17 கோடியில் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் கால்வாய்களைச் ... மேலும் பார்க்க

தொழிலதிபரிடம் 20 பவுன் நகை, ரூ. 40,000 பறிப்பு: 4 போ் கைது

மசாஜ் செய்வதாக அழைத்து தொழிலதிபரிடம் 20 பவுன் நகைகள், ரூ.40,000-ஐ பறித்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஓட்டேரியைச் சோ்ந்தவா் தொழிலதிபா் சாா்லஸ் (50). இவா் வழக்கமாக செல்லும் மசாஜ் சென்டரில் ஆண்ட்ர... மேலும் பார்க்க