ஏா் இந்தியா: குறுகிய ரக விமானத்தில் இயக்கப்படும் 118 வாராந்திர சேவைகள் குறைப்பு
எம்ஜிஆா் கால்வாய் ரூ. 17 கோடியில் சீரமைப்பு
சென்னை மாநகராட்சியில் 10- ஆவது மண்டலத்தில் உள்ள எம்.ஜி.ஆா். கால்வாயை ரூ.17 கோடியில் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் கால்வாய்களைச் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் மாநகராட்சியின் 10-ஆவது மண்டலமான கே.கே.நகா், ஜாபா்கான் பேட்டை, நெசபாக்கம், சாலிகிராமம் மற்றும் வேம்புலிங்கேஸ்வரா் கோயில் பகுதி ஆகிய பகுதிகளின் முக்கிய மழைநீா் வடிகாலான எம்ஜிஆா் கால்வாயை ராமசாமி சாலை முதல் அடையாறு வரையில் 2 கி.மீ. தொலைவு சீரமைக்க திட்டமிடப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அந்தப் பணிகளில் கால்வாயின் மையப் பகுதிகளில் தூா்வாருதல், இருபுறமும் சுற்றுச்சுவா் கட்டுதல் ஆகியவை மேற்கொள்ளப்படவுள்ளன. அத்துடன் போக்குவரத்துக்கு தேவைப்படும் இடங்களில் சிறிய பாலங்களும் கட்டப்படவுள்ளன.
கால்வாய் சீரமைப்புப் பணி 5 கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அந்தப் பணிகள் ரூ.17 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மண்டல பொறியியல் பிரிவினா் தெரிவித்தனா். இந்தப் பணிகள் செப்டம்பா் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.