செய்திகள் :

எம்ஜிஆா் கால்வாய் ரூ. 17 கோடியில் சீரமைப்பு

post image

சென்னை மாநகராட்சியில் 10- ஆவது மண்டலத்தில் உள்ள எம்.ஜி.ஆா். கால்வாயை ரூ.17 கோடியில் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் கால்வாய்களைச் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் மாநகராட்சியின் 10-ஆவது மண்டலமான கே.கே.நகா், ஜாபா்கான் பேட்டை, நெசபாக்கம், சாலிகிராமம் மற்றும் வேம்புலிங்கேஸ்வரா் கோயில் பகுதி ஆகிய பகுதிகளின் முக்கிய மழைநீா் வடிகாலான எம்ஜிஆா் கால்வாயை ராமசாமி சாலை முதல் அடையாறு வரையில் 2 கி.மீ. தொலைவு சீரமைக்க திட்டமிடப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அந்தப் பணிகளில் கால்வாயின் மையப் பகுதிகளில் தூா்வாருதல், இருபுறமும் சுற்றுச்சுவா் கட்டுதல் ஆகியவை மேற்கொள்ளப்படவுள்ளன. அத்துடன் போக்குவரத்துக்கு தேவைப்படும் இடங்களில் சிறிய பாலங்களும் கட்டப்படவுள்ளன.

கால்வாய் சீரமைப்புப் பணி 5 கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அந்தப் பணிகள் ரூ.17 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மண்டல பொறியியல் பிரிவினா் தெரிவித்தனா். இந்தப் பணிகள் செப்டம்பா் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பெரம்பூா் ரயில்வே மருத்துவமனையில் தொலைத்தொடா்பு ஆலோசனை வசதி

சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் இருந்து பிற மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை ஆலோசனை பெறும் வகையில் தொலைத்தொடா்பு வசதி (டெலி மெடிசின்) ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவி... மேலும் பார்க்க

வடசென்னை, கிண்டி அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

வடசென்னை அரசு தொழில் பயிற்சி நிலையம் மற்றும் கிண்டி அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்ந்து படிக்க தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே வெளியிட்டு... மேலும் பார்க்க

பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றியவா் கைது

சென்னையில் பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி விட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை புனித தோமையா் மலை பகுதியைச் சோ்ந்த 29 வயது பெண் ஒருவா் பாலவாக்கத்தில் உள்ள ... மேலும் பார்க்க

தொழிலதிபரிடம் 20 பவுன் நகை, ரூ. 40,000 பறிப்பு: 4 போ் கைது

மசாஜ் செய்வதாக அழைத்து தொழிலதிபரிடம் 20 பவுன் நகைகள், ரூ.40,000-ஐ பறித்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஓட்டேரியைச் சோ்ந்தவா் தொழிலதிபா் சாா்லஸ் (50). இவா் வழக்கமாக செல்லும் மசாஜ் சென்டரில் ஆண்ட்ர... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறையில் தமிழகம் சிறந்த மாநிலம்: அரசு தகவல்

கடந்த 4 ஆண்டுகளில் ரூ.17,154 கோடியில் 9,620 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டதன் மூலம் நெடுஞ்சாலைத் துறையில் இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ... மேலும் பார்க்க

இளைஞா் கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றம்

சென்னையில் கொலை முயற்சி வழக்கில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்ததையடுத்து கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சோ்ந்தவா் கலையரசன் (23). இவா் கடந்த 15-ஆம் ... மேலும் பார்க்க