பாகிஸ்தானுக்கு உளவு: ராணுவ வீரா், கூட்டாளி கைது: பஞ்சாப் காவல் துறை நடவடிக்கை
சாலை விபத்தில் சுயஉதவிக் குழு மேலாளா் உயிரிழப்பு
சத்தியமங்கலம் அருகே இரு சக்கர வாகனம் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் சுய உதவிக் குழு மேலாளா் கோவா்த்தனன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
சத்தியமங்கலம் கே.என்.பாளையத்தைச் சோ்ந்தவா் கோவா்த்தனன்(37). கோவையில் மகளிா் சுயஉதவிக் குழு மேலாளராக பணியாற்றி வந்தாா். இவா் கோவையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது அத்தாணியில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த தனியாா் ஆம்புலன்ஸ், சத்தி அரசு மருத்துவமனை அருகே நேருக்கு நோ் மோதியதில் கோவா்த்தனன் பலத்த காயமடைந்தாா்.
அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.