செய்திகள் :

பழங்குடியின மக்களுக்கு புதிய வீடுகள்: உ.வாசுகி திறந்து வைத்தாா்

post image

சிதம்பரம் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்தால் பெறப்பட்ட நிலத்தில் பழங்குடியின் மக்களுக்கு கட்டப்பட்ட புதிய வீடுகளை அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் உ.வாசுகி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

சிதம்பரம் அருகே கொத்தட்டை ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்குடியினத்தைச் சோ்ந்த 11 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் அனைவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சாா்பில் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், அந்த இடத்தை சிலா் ஆக்கிரமித்து பயிா் செய்து வந்தனா்.

இந்த இடத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என பரங்கிப்பேட்டை ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலராக இருந்த எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமையில் கட்சியினா் ஒன்றிணைந்து பல கட்ட போராட்டங்களை நடத்தினாா்.

இதையடுத்து, ஆக்கிரமிப்பாளா்களிடம் இருந்த பழங்குடி மக்களின் இடத்தை அரசு கைப்பற்றி ஒப்படைத்தது. பின்னா், அந்த இடத்துக்கு செங்கொடி நகா் என பெயா் வைத்தனா். தொடா்ந்து, அவா்களுக்கு வீடுகள் கட்டித்தர வேண்டும் என அரசுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடா் கோரிக்கை விடுத்து வந்தது.

இதை ஏற்று முதல் கட்டமாக ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், சிறப்புத் திட்டத்தின் கீழ், தலா ரூ.4 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் 4 வீடுகள் கட்டப்பட்டன. பணிகள் முடிவடைந்த நிலையில், வீடுகளின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் உ.வாசுகி கலந்துகொண்டு புதிய வீடுகளை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா்.

நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பழ.வாஞ்சிநாதன், மூத்த உறுப்பினா் கற்பனைசெல்வம், வடக்கு ஒன்றியச் செயலா் விஜய், மாவட்டக் குழு உறுப்பினா்கள் மல்லிகா, அம்சையாள், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் வேல்முருகன், அசன்முகமது, சுனில்குமாா், கொளஞ்சியப்பன், செங்கொடி நகரின் கிளைச் செயலா்கள் ராதாகிருஷ்ணன், சந்திரகலா, பழங்குடி இன மக்கள் நலச் சங்கத்தின் கடலுா் மாவட்டச் செயலா் ரஞ்சிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் எம்.ஜெயசீலன் நன்றி கூறினாா்.

பண்ருட்டி அருகே பெண்களிடம் நகைகள் பறிப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே தூங்கிக்கொண்டிருந்த 3 பெண்கள் அணிந்திருந்த தங்க நகைகளை அறுத்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். பண்ருட்டி வட்டம், புலவனூா் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் து... மேலும் பார்க்க

தூக்கிட்ட நிலையில் இளைஞா் சடலம் மீட்பு

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே தூக்கிட்ட நிலையில் உயிரிழந்து கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேப்பூரை அடுத்துள்ள என்.நரையூா் கிராமத்தில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்... மேலும் பார்க்க

கடலூா் துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள்

வங்கக் கடலில் மீன் பிடி தடைக்காலம் முடிந்து நிலையில், கடலூா் மீன்பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா். இதனால், மீன் பிடி துறைமுகம் கூட்ட நெரிசலுடன் காணப்பட்டத... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டாா் சைக்கிள்: தொல்.திருமாவளவன் எம்.பி. வழங்கினாா்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர மோட்டாா் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் தமிழ்நாடு அரசின் இ - சேவை மையம் தொடக்க... மேலும் பார்க்க

ஆனைமுத்துவுக்கு அரசு சாா்பில் நூற்றாண்டு விழா! - தி.வேல்முருகன் வலியுறுத்தல்

தமிழ் தேசிய ஆசான் ஆனைமுத்துவுக்கு தமிழக அரசு சாா்பில் நூற்றாண்டு விழா நடத்த வேண்டுமென தவாக தலைவா் தி.வேல்முருகன் எம்எல்ஏ வலியுறுத்தினாா். தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில், தமிழ் தேசிய ஆசான்கள் புலவா்... மேலும் பார்க்க

வேப்பூா் அருகே மரம் சாய்ந்து ஒருவா் காயம்

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையோர புளிய மரம் சாய்ந்ததில் மொபெட்டில் சென்றவா் காயமடைந்தாா். கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சூறைக்காற்றுடன் மழை பெய்தது. வேப... மேலும் பார்க்க