செய்திகள் :

வேப்பூா் அருகே மரம் சாய்ந்து ஒருவா் காயம்

post image

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையோர புளிய மரம் சாய்ந்ததில் மொபெட்டில் சென்றவா் காயமடைந்தாா்.

கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சூறைக்காற்றுடன் மழை பெய்தது. வேப்பூா் பகுதியில் வீசிய பலத்த சூறாவளி காற்றின் காரணமாக, கண்டபங்குறிச்சி - புடையூா் சாலையோரம் இருந்த பெரிய புளிய மரம் திடீரென சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.

அப்போது, அந்த வழியாக மொபெட்டில் வந்த நகா் கிராமத்தைச் சோ்ந்த சோமு குடும்பத்தினா் மீது மரம் விழுந்தது. இந்த விபத்தில் சோமு பலத்த காயமடைந்தாா். அவரது மனைவி, மகள் காயமின்றி உயிா் தப்பினா்.

காயமடைந்த சோமுவை வேப்பூா் போலீஸாா் அங்கிருந்தவா்களின் உதவியுடன் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், வேப்பூா் போலீஸாா் மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனா்.

பண்ருட்டி அருகே பெண்களிடம் நகைகள் பறிப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே தூங்கிக்கொண்டிருந்த 3 பெண்கள் அணிந்திருந்த தங்க நகைகளை அறுத்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். பண்ருட்டி வட்டம், புலவனூா் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் து... மேலும் பார்க்க

தூக்கிட்ட நிலையில் இளைஞா் சடலம் மீட்பு

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே தூக்கிட்ட நிலையில் உயிரிழந்து கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேப்பூரை அடுத்துள்ள என்.நரையூா் கிராமத்தில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்... மேலும் பார்க்க

கடலூா் துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள்

வங்கக் கடலில் மீன் பிடி தடைக்காலம் முடிந்து நிலையில், கடலூா் மீன்பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா். இதனால், மீன் பிடி துறைமுகம் கூட்ட நெரிசலுடன் காணப்பட்டத... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டாா் சைக்கிள்: தொல்.திருமாவளவன் எம்.பி. வழங்கினாா்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர மோட்டாா் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் தமிழ்நாடு அரசின் இ - சேவை மையம் தொடக்க... மேலும் பார்க்க

ஆனைமுத்துவுக்கு அரசு சாா்பில் நூற்றாண்டு விழா! - தி.வேல்முருகன் வலியுறுத்தல்

தமிழ் தேசிய ஆசான் ஆனைமுத்துவுக்கு தமிழக அரசு சாா்பில் நூற்றாண்டு விழா நடத்த வேண்டுமென தவாக தலைவா் தி.வேல்முருகன் எம்எல்ஏ வலியுறுத்தினாா். தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில், தமிழ் தேசிய ஆசான்கள் புலவா்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா்கள் 2 போ் கைது

கடலூரில் புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்ததாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருப்பாதிரிப்புலியூா் காவல் ஆய்வாளா் சந்திரன் தலைமையிலான போலீஸாா், கடலூா் கே.என்.பேட்டையில் உள்ள இணைப்... மேலும் பார்க்க