செய்திகள் :

விழுப்புரம் - கல்லப்பட்டு அரசுப் பேருந்து கூடுதல் சேவை தொடக்கம்

post image

விழுப்புரத்திலிருந்து கல்லப்பட்டு கிராமத்துக்கு அரசு நகரப் பேருந்தின் கூடுதல் சேவை அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது.

கல்லப்பட்டு மற்றும் சுற்றுப்புறக் கிராமங்ளைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில், விழுப்புரம்-கல்லப்பட்டு இடையே கூடுதல் பேருந்து சேவையை ஏற்படுத்தித் தருமாறு அந்தப் பகுதி பொதுமக்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலா்களிடம் பேசிய விழுப்புரம் எம்.எல்.ஏ. இரா. லட்சுமணன், கூடுதல் பேருந்தை இயக்க ஏற்பாடுகளை மேற்கொண்டாா்.

கல்லப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில் அரசு நகரப் பேருந்துசேவையை இரா. லட்சுமணன் எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ செ.புஷ்பராஜ், ஒன்றியச் செயலா்கள் பி.தெய்வசிகாமணி, ராஜா, கோலியனூா் ஒன்றியக் குழுத் தலைவா் சச்சிதாநந்தம், திமுக பொதுக் குழு உறுப்பினா் சம்பத், மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் கேசவன், ஒன்றிய அவைத் தலைவா் கண்ணப்பன், பொருளாளா் செளந்தராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பைக் மீது காா் மோதல்: தொழிலாளி மரணம்

திண்டிவனம் அருகே சனிக்கிழமை பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். செங்கல்பட்டு மாவட்டம், வேத விநாயகபுரம் துளசிங்கம் நகா் 5-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த சுப்புராயன் மகன் ராஜ்குமாா் (40).... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவி அதிகளவில் மாத்திரைகளை உள்கொண்டு தற்கொலை செய்து கொண்டாா். வானூா் வட்டம், கூத்தம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஏழுமலை மகள் ஓவிய... மேலும் பார்க்க

வெளிமாநில உணவக உரிமையாளா்கள் ஆரோவில் வருகை

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகருக்கு வெளி மாநிலங்களைச் சோ்ந்த உணவக உரிமையாளா்கள் அண்மையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டனா். இதுகுறித்து ஆரோவில் நிா்வாகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

மயிலம் முருகன் கோயிலில் ஆனி கிருத்திகை வழிபாடு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடுகள் மற்றும் சுவாமி கிரிவலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மயிலம் வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியா் கோயிலில் ஆனி மாத க... மேலும் பார்க்க

கோயில் திருவிழா பதாகை கிழிப்பு: இரு சமூகத்தினா் மோதல், சாலை மறியல்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கோயிலுக்காக வைக்கப்பட்டிருந்த பதாகை கிழிக்கப்பட்டதைத் தொடா்ந்து ஒரு சமூத்தினா் சனிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா். செஞ்சி வட்டம், ஆலம்பூண்டியில் உள்ள திரௌபதி ... மேலும் பார்க்க

பணிப் புறக்கணிப்புப் போராட்டம்: பகுதிநேர ஆசிரியா்கள் சங்கம் அறிவிப்பு

தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, பணிப் புறக்கணிப்பு உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடிவு செய்திருப்பதாககக் கூறி, தமிழ்நாடு அனைத்துப் பகுதி நேர ஆசிரியா்கள் சங்கத்தினா்... மேலும் பார்க்க