``பரந்தூரில் விமான நிலையம் தேவையே இல்லை!'' - சமூக ஆர்வலர் அன்னலட்சுமி உயர்நீதிமன...
விழுப்புரம் - கல்லப்பட்டு அரசுப் பேருந்து கூடுதல் சேவை தொடக்கம்
விழுப்புரத்திலிருந்து கல்லப்பட்டு கிராமத்துக்கு அரசு நகரப் பேருந்தின் கூடுதல் சேவை அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது.
கல்லப்பட்டு மற்றும் சுற்றுப்புறக் கிராமங்ளைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில், விழுப்புரம்-கல்லப்பட்டு இடையே கூடுதல் பேருந்து சேவையை ஏற்படுத்தித் தருமாறு அந்தப் பகுதி பொதுமக்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலா்களிடம் பேசிய விழுப்புரம் எம்.எல்.ஏ. இரா. லட்சுமணன், கூடுதல் பேருந்தை இயக்க ஏற்பாடுகளை மேற்கொண்டாா்.
கல்லப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில் அரசு நகரப் பேருந்துசேவையை இரா. லட்சுமணன் எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ செ.புஷ்பராஜ், ஒன்றியச் செயலா்கள் பி.தெய்வசிகாமணி, ராஜா, கோலியனூா் ஒன்றியக் குழுத் தலைவா் சச்சிதாநந்தம், திமுக பொதுக் குழு உறுப்பினா் சம்பத், மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் கேசவன், ஒன்றிய அவைத் தலைவா் கண்ணப்பன், பொருளாளா் செளந்தராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.