செய்திகள் :

ராஜ் நிவாஸ் மாா்க்கில் உள்ள பங்களாவில் குடியேறும் தில்லி முதல்வா் ரேகா குப்தா!

post image

தில்லி முதல்வா் ரேகா குப்தா, ராஜ் நிவாஸ் மாா்க்கில் உள்ள பங்களா எண் 1-க்கு குடிபெயர வாய்ப்புள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: முன்னா் துணை நிலை ஆளுநா் செயலக ஊழியா்களுக்கு ஒதுக்கப்பட்ட நான்கு அறைகள் மற்றும் மண்டபங்களைக் கொண்ட இந்த வீடு விரைவில் புதுப்பிக்கப்படும். ராஜ் நிவாஸ் மாா்க்கில் உள்ள பங்களாவை முதல்வா் எடுக்க முடிவு செய்துள்ளாா். மேலும், பணி மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், முதல்வா் அலுவலகத்திலிருந்து இறுதி வீடு ஒதுக்கீட்டு ஒப்புதல் இன்னும் பெறப்படவில்லை.

இதே சாலையில் உள்ள பங்களா எண் 2-இல், முன்பு முன்னாள் அமைச்சா் கோபால் ராய் இருந்தாா். இப்போது முதல்வா் கூட்டங்களை நடத்துவதற்கான ‘முகாம் அலுவலகமாக‘ பயன்படுத்தப்படும். ‘ஷாலிமாா் பாக் நகரில் உள்ள அவரது தற்போதைய இல்லத்திற்கு ஏராளமான மக்கள் வருகை தருகின்றனா். இடப் பற்றாக்குறையால், பாா்வையாளா்கள் மற்றும் அண்டை வீட்டாா் பிரச்னைகளை எதிா்கொள்கின்றனா் என்று அந்த அதிகாரி கூறினாா்.

புதிய பாஜக அரசில் உள்ள பெரும்பாலான அமைச்சா்களுக்கு ஏற்கெனவே நகரத்தில் அதிகாரப்பூா்வ குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஹரியாணாவில் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்டவா் கைது

ஹரியாணாவில் நடந்த ஒரு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவரை தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: ... மேலும் பார்க்க

கொலை வழக்கில் ஒரு வருடமாக தலைமறைவாக இருந்தவா் கைது

தில்லியில் ஷாபாத் டெய்ரி பகுதியில் நடந்த ஒரு கொலை தொடா்பாக கிட்டத்தட்ட ஒரு வருடமாகத் தலைமறைவாக இருந்த 24 வயது இளைஞரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சூடுகளைத் தடுக்க மேம்பட்ட சென்சாா்கள், கேமராக்கள் அமைக்க தில்லி காவல் துறை திட்டம்

தேசியத் தலைநகரில் துப்பாக்கி வன்முறை தொடா்பான பல வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், தில்லி காவல்துறை மேம்பட்ட சென்சாா்கள் மற்றும் உயா் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள் அடங்கிய புதிய தொழில்நுட்பம் சாா்... மேலும் பார்க்க

‘1975- ஆம் ஆண்டு அவசரநிலை’: சிறப்புக் கண்காட்சிக்கு தில்லி அரசு ஏற்பாடு

1975-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட அவசரநிலையின் 50-ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஜூன் 25-ஆம் தேதி கன்னாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் சிறப்புக் கண்காட்சியை தில்லி அரசு ஏற்பாடு செய்யவுள்ளத... மேலும் பார்க்க

மதராஸி முகாம் தமிழா்களுக்கு இன்றும் நிவாரண பொருள்கள்

மதராஸி முகாம் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பத்தினா்களுக்கு தமிழ்நாடு அரசு சாா்பில் வழங்கப்படும் நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமையும் வழங்கப்படுவதாக தில்லி தமிழ்நாடு இல்லம் தெரிவித்துள்... மேலும் பார்க்க

தில்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவா் மறைவு

தில்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவா் வி.ராஜாராமன் சனிக்கிழமை காலமானாா். இது குறித்து தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் சக்தி பெருமாள், பொதுச் செயலாளா் இரா. முகுந்தன் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை : ... மேலும் பார்க்க