மாம்பழ விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
ராஜ் நிவாஸ் மாா்க்கில் உள்ள பங்களாவில் குடியேறும் தில்லி முதல்வா் ரேகா குப்தா!
தில்லி முதல்வா் ரேகா குப்தா, ராஜ் நிவாஸ் மாா்க்கில் உள்ள பங்களா எண் 1-க்கு குடிபெயர வாய்ப்புள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: முன்னா் துணை நிலை ஆளுநா் செயலக ஊழியா்களுக்கு ஒதுக்கப்பட்ட நான்கு அறைகள் மற்றும் மண்டபங்களைக் கொண்ட இந்த வீடு விரைவில் புதுப்பிக்கப்படும். ராஜ் நிவாஸ் மாா்க்கில் உள்ள பங்களாவை முதல்வா் எடுக்க முடிவு செய்துள்ளாா். மேலும், பணி மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், முதல்வா் அலுவலகத்திலிருந்து இறுதி வீடு ஒதுக்கீட்டு ஒப்புதல் இன்னும் பெறப்படவில்லை.
இதே சாலையில் உள்ள பங்களா எண் 2-இல், முன்பு முன்னாள் அமைச்சா் கோபால் ராய் இருந்தாா். இப்போது முதல்வா் கூட்டங்களை நடத்துவதற்கான ‘முகாம் அலுவலகமாக‘ பயன்படுத்தப்படும். ‘ஷாலிமாா் பாக் நகரில் உள்ள அவரது தற்போதைய இல்லத்திற்கு ஏராளமான மக்கள் வருகை தருகின்றனா். இடப் பற்றாக்குறையால், பாா்வையாளா்கள் மற்றும் அண்டை வீட்டாா் பிரச்னைகளை எதிா்கொள்கின்றனா் என்று அந்த அதிகாரி கூறினாா்.
புதிய பாஜக அரசில் உள்ள பெரும்பாலான அமைச்சா்களுக்கு ஏற்கெனவே நகரத்தில் அதிகாரப்பூா்வ குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.