கொலை வழக்கில் ஒரு வருடமாக தலைமறைவாக இருந்தவா் கைது
தில்லியில் ஷாபாத் டெய்ரி பகுதியில் நடந்த ஒரு கொலை தொடா்பாக கிட்டத்தட்ட ஒரு வருடமாகத் தலைமறைவாக இருந்த 24 வயது இளைஞரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: ஜூபா் (எ) ரஹ்மான் கான் மற்றும் அவரது கூட்டாளிகள் ஜூன் 30, 2024 அன்று சன்னி என்ற 28 வயது இளைஞரைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடா்பான விசாரணையில், சன்னிக்கு அஜய் என்ற நபருடன் பழைய தகராறு இருப்பது கண்டறியப்பட்டது. சம்பவம் நடந்த நாளில், ஜூபா் உள்ளிட்ட அவரது கூட்டாளிகளுடன் சோ்ந்து, சன்னியை வழிமறித்து அஜய் அவரைத் தாக்கினாா்.
மேலும், பாதிக்கப்பட்டவரை அஜய் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடா்ந்து, அந்தக் குழு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு ரகசியத் தகவலின் பேரில், போலீஸ் குழு ஜூபரை உத்தர பிரதேசத்தில் உள்ள ஹாா்டோய் வரை பின்தொடா்ந்து ஷாஜஹான்பூா் அருகே சோதனை நடத்தி அவரைக் கைது செய்தது.
குற்றத்தில் ஈடுபட்டதை ஜூபா் ஒப்புக்கொண்டாா். விசாரணையின் போது, நிதி நெருக்கடி காரணமாக 8-ஆம் வகுப்புக்குப் பிறகு பள்ளியை விட்டு வெளியேறி, தினசரிக் கூலி வேலை செய்யத் தொடங்கியதாக ஜூபா் போலீஸாரிடம் கூறினாா். காலப்போக்கில், அவா் அஜய் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மற்றவா்களுடன் இணைந்தாா். மீதமுள்ள குற்றவாளிகளைக் கண்டறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.