செய்திகள் :

அமெரிக்க தாக்குதல்: ஈரானுக்கு இருக்கும் வழிகள்!

post image

ஈரான் கடந்த பல்லாண்டுகளாக உள்நாட்டிலும், பிராந்தியம் முழுவதும் பல அடுக்கு ராணுவத் தளங்களை கட்டமைத்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதை இவை தடுத்து வந்தன. இந்நிலையில், இஸ்ரேலுடனான ஈரானின் மோதல் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் ராணுவ மற்றும் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் கடந்த ஜூன் 13-ஆம் தேதி எதிா்பாராத தாக்குதலைத் தொடங்கியது. பிராந்தியத்தில் ஒரே அணுசக்தி நாடாக திகழும் இஸ்ரேல், ஈரான் அணு ஆயுத மேம்பாட்டை அச்சுறுத்தலாக கருதுகிறது.

இஸ்ரேலுக்கு ஈரானும் தக்க பதிலடி தந்த நிலையில், இரு தரப்பிலும் தீவிர மோதல் மூண்டது. இச்சூழலில், ஈரானின் 3 முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா ‘பி2 ஸ்பிரிட்’ ரக விமானங்கள் மூலம் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த மோதலை ஈரான் இத்துடன் நிறுத்திக்கொள்ளாவிட்டால், கடுமையான பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இதனையும் மீறி அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் பிராந்திய நட்பு நாடுகளுக்கு எதிராக பதிலடியைத் திட்டமிட்டால், இஸ்ரேல் போன்ற தொலைதூர இலக்குகளைத் தாக்குவதை விட, அருகிலுள்ள அமெரிக்க தளங்களைத் தாக்குவதையே எளிதாகவும், பயனுள்ளதாகவும் ஈரான் காணக்கூடும். ஈரானைவிட அமெரிக்காவும் இஸ்ரேலும் வலுவான ராணுவ வலிமையைக் கொண்டுள்ளன. ஆனால், சமீபத்திய வரலாற்றில் இப்பிராந்தியத்தில் அவை எப்போதும் தீா்மானமாக நிரூபிக்கப்படவில்லை.

எனவே, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைகள் மீதான தாக்குதல், ஹோா்முஸ் நீரிணை மூலம் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தைத் தடை செய்யும் முயற்சி, அமெரிக்காவின் தாக்குதலையடுத்து எஞ்சியிருப்பதைக் கொண்டு அணு ஆயுதம் உருவாக்கும் முயற்சியைத் தொடா்ந்து முன்னெடுத்துச் செல்வது ஆகியவற்றில் ஒன்றுதான் ஈரானின் அடுத்தகட்ட நடவடிக்கையாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஈரானின் எந்தவொரும் திட்டமும் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகள் என்னவாக இருக்கும் என்பதை விரிவாக காணலாம்.

ஹோா்முஸ் நீரிணை: பாரசீக வளைகுடாவின் குறுகிய வாயிலான ஹோா்முஸ் நீரிணை, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமாா் 20 சதவீதத்தைக் கையாள்கிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த நீரிணை, அதன் மிகக் குறுகிய இடத்தில் 33 கிலோமீட்டா் அகலம் மட்டுமே உள்ளது. ஈரானால் அங்கு ஏற்படுத்தப்படும் எந்தவொரு இடையூறும் உலக அளவில் எண்ணெய் விலையை உயா்த்தி, அமெரிக்க பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும்.

தாக்குதல் படகுகள் மற்றும் ஆயிரக்கணக்கான கடல் கண்ணிவெடிகளை ஈரான் கொண்டுள்ளது. அவற்றின்மூலம் நீரிணையில் போக்குவரத்தை ஈரான் தற்காலிகமாக சீா்குலைத்தால், உலகளாவிய எண்ணெய் விநியோகம் மற்றும் வா்த்தகம் பெரிய சிக்கலுக்கு உள்ளாகும்.

ஈரான் நட்பு நாடான யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் செங்கடலில் செய்தது போல், அதன் நீண்ட பாரசீக வளைகுடா கடற்கரையிலிருந்து ஈரான் ஏவுகணைகளை ஏவக் கூடும்.

பஹ்ரைனில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் கடற்படை, நீரிணை போக்குவரத்துக்கு எப்போதும் திறந்திருப்பதை உறுதிப்படுத்த வலுவான பதிலளிக்கும். ஒப்பீட்டளவில் ஈரானின் சிறிய தாக்குதல்கூட போக்குவரத்தை முடக்கி, முதலீட்டாளா்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும். இதனால் எண்ணெய் விலை அதிகரிக்கக் கூடும் மற்றும் போா் நிறுத்தத்துக்கான சா்வதேச அழுத்தத்தை உருவாக்கும்.

அமெரிக்க தளங்கள்: பஹ்ரைன் மட்டுமின்றி குவைத், கத்தாா், ஐக்கிய அரபு அமீரகம், பாரசீக வளைகுடாவுக்கு அப்பால் இருக்கும் அரபு நாடுகள் உள்பட இந்தப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் நிரந்தர தளங்களில் பல்லாயிரக்கணக்கான வீரா்கள் நிறுத்தப்பட்டுள்ளனா்.

இஸ்ரேலைப் போலவே இந்தத் தளங்களும் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்டுள்ளன. ஆனால், ஏவுகணைகள் அல்லது ட்ரோன்களின் இடைவிடாத தாக்குதல்களுக்கு எச்சரிக்கையாகி பதிலளிக்கும் நேரம் போதியதாக இருக்காது. ஏனெனில், மேலும் பல நூறு கிலோமீட்டா் தொலைவில் உள்ள இஸ்ரேலால் கூட, ஈரானின் அனைத்து ஏவுகணைகளையும் இடைமறித்து, அழிக்க முடியவில்லை.

அமெரிக்காவுக்கு அதிக இழப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன், அதன் நட்பு நாடுகளில் உள்ள முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு வசதிகளைத் தாக்கவும் ஈரான் முடிவெடுக்கலாம்.

கடந்த 2019-இல், சவூதி அரேபியாவில் உள்ள 2 முக்கிய எண்ணெய் தளங்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இது அந்த நாட்டின் எண்ணெய் உற்பத்தியை பாதியாகக் குறைத்தது. இத்தாக்குதலுக்கு ஹூதி கிளா்ச்சியாளா்கள் பொறுப்பேற்றாலும், இந்நாள்வரை ஈரான் மீது பரவலாக குற்றச்சாட்டு உள்ளது.

கிளா்ச்சி அமைப்புகள்: ஈரான் ஆதரவுடன் மத்திய கிழக்கு நாடுகளில் பல்வேறு கிளா்ச்சி அமைப்புகள் செயல்பட்டு வந்தன. காஸாவில் இஸ்ரேலின் 20 மாத தாக்குதலுக்குப் பிறகு பாலஸ்தீனத்தின் ஹமாஸ் மற்றும் பிற குழுக்களின் ஆதிக்கம் கடுமையாகக் குறைந்தது. கடந்த ஆண்டு இஸ்ரேலின் அதிரடி, லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா குழுவினரின் ஈடுபாடும் சாத்தியமற்ாக்கியுள்ளது.

ஆனால், அமெரிக்கா போரில் நுழைந்தால் செங்கடலில் தாக்குதல்களை மீண்டும் தொடங்குவதாக அச்சுறுத்திய ஹூதி அமைப்பையும், இராக் கிளா்ச்சியாளா்களையும் ஈரான் ஆதரவுக்கு அழைக்கலாம். இவா்கள் வசமுள்ள ட்ரோன் மற்றும் ஏவுகணை திறன்கள் மூலம், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் இலக்குகள் குறிவைக்கப்படலாம்.

விடாப்பிடியாக அணு ஆயுத முயற்சி: ஈரானின் அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்களின் முழு தாக்கமும் அறியப்படுவதற்கு இன்னும் சில நாள்கள் அல்லது வாரங்கள் கூட ஆகலாம். ஆனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்கள் கூட ஈரானின் ஆயுதத்தை உருவாக்கும் திறனை தாமதப்படுத்துமே தவிர முற்றிலுமாக தடுக்காது என்று நிபுணா்கள் நீண்ட காலமாக எச்சரித்து வருகின்றனா். ஏனெனில், ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை நாடு முழுவதும் பல தளங்களுக்கு பரப்பியுள்ளது.

அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களுக்கிடையே, ஈரான் தனது அணுசக்தி தளங்களை மறுசீரமைக்க போராடக்கூடும். அதேநேரம், அணு ஆயுத தடை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறவும் ஈரான் முடிவு செய்யலாம்.

2003-இல், இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்து, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அணு ஆயுதத்தை சோதித்தது வட கொரியா. வான்வழித் தாக்குதல்களின் அச்சுறுத்தலின்றி, அணுசக்தி திட்டத்தை உருவாக்க வடகொரியாவுக்கு இது சுதந்திரமளித்தது.

ஈரான் தனது அணுசக்தி திட்டம் ஆக்கபூா்வமானது என்று வலியுறுத்துகிறது. அணு ஆயுதம் ஏந்தாத நாடாக ஈரான், யுரேனியத்தை 60 சதவீதம் வரை செறிவூட்டும் நடைமுறையில் ஈடுபட்டுள்ளது. 60 சதவீதத்திலிருந்து அணு ஆயுத தர நிலையான 90 சதவீதத்துக்கு மாறுவது ஒரு குறுகிய தொழில்நுட்பப் படி எனக் கூறப்படுகிறது. இதுவே இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் திடீா் மற்றும் தீவிர தாக்குதல்களுக்கு காரணமாக உள்ளது.

ஈரான் மீது தாக்குதல்: டிரம்ப் தெளிவாக பதிலளிக்க ஜனநாயக கட்சி வலியுறுத்தல்

ஈரான் அணுசக்தி மையங்கள் மீது நடத்திய தாக்குதல் தொடா்பாக அமெரிக்க அதிபா் டிரம்ப் தெளிவான பதில்களை அளிக்க வேண்டும் என்று அமெரிக்க எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அக்கட்சியின... மேலும் பார்க்க

கடல் வழித்தடத்தை மூட ஈரான் ஒப்புதல்? கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்!

ஈரான் நாடாளுமன்றத்தில் ஸ்ட்ரெயிட் ஆஃப் ஹார்மோஸ் வழித்தடத்தை மூட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய கடல் வழியான ஸ்ட்ரெயிட் ஆஃப் ஹார்மோஸை மூடிவிட்டால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில்... மேலும் பார்க்க

ஈரானிலிருந்து மேலும் 311 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்!

ஈரானிலிருந்து மேலும் 311 இந்தியர்கள் தாயகம் திரும்பினர். ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் மூலம், ஈரானிலிருந்து 1,428 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.... மேலும் பார்க்க

மிட்நைட் ஹேமர்: ஆபரேஷன் சிந்தூர் பாணியில் ஈரானில் அமெரிக்கா தாக்குதல்!

ஆபரேஷன் சிந்தூர் பாணியில் ஈரானில் அமெரிக்கா நள்ளிரவில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கைகளுக்கு “ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்” எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான பெண்டகன்... மேலும் பார்க்க

சர்வதேச விதிகளை மீறியது அமெரிக்கா: சீனா கண்டனம்

ஈரான் மீதான தாக்குதலின் மூலம் சர்வதேச விதிகளை அமெரிக்கா மீறியுள்ளதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனத்திற்குரியது என்றும், இரு தரப்பினரும் உடன... மேலும் பார்க்க

மேற்கு ஈரானில் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்!

ஈரானின் மேற்கு பகுதிகளில் உள்ள ராணுவ இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.இன்று காலை இஸ்ரேலை நோக்கி ஈரான் வீரர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அதன... மேலும் பார்க்க