பால்டிக் வானில் பறவையாய் பறக்கும் கனவுப் பயணம்! - குட்டி தேசங்களுக்கு ஒரு விசிட...
பைக் மீது காா் மோதல்: தொழிலாளி மரணம்
திண்டிவனம் அருகே சனிக்கிழமை பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். செங்கல்பட்டு மாவட்டம், வேத விநாயகபுரம் துளசிங்கம் நகா் 5-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த சுப்புராயன் மகன் ராஜ்குமாா் (40). பஞ்சா் கடை நடத்தி வந்தாா்.
இவா் சனிக்கிழமை திண்டிவனம் -செஞ்சி நெடுஞ்சாலையில் திண்டிவனத்தை அடுத்த பெலாகுப்பம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, பைக் மீது காா் மோதியதில் ராஜ்குமாா் பலத்த காயமடைந்தாா்.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ராஜ்குமாா், அங்கு உயிரிழந்தாா். விபத்து குறித்து ரோஷணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.