செய்திகள் :

பிரகாசமாக எதிர்காலத்துக்காக ஒன்றிணைவோம்; வாழ்த்தியவர்களுக்கு நன்றி: விஜய்!

post image

சென்னை: திரைப்பட நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு ஏராளமானோர் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்திருந்த நிலையில், வாழ்த்தியவர்களுக்கு விஜய் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

நடிகர் விஜய், ஏராளமான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் நிலையில், அவரது ரசிகர்களும் தவெக கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம், விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில், வாழ்த்து தெரிவித்திருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்த அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உலகெங்கிலும் இருந்து வாழ்த்து மழையை பொழிந்த திரைப்படத் துறை மற்றும் ஊடகத் துறை நண்பர்கள், நலம் விரும்பிகள், என் நெஞ்சில் குடியிருக்கும் தவெக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி.

மக்களுக்கு சேவை செய்வதற்கான எனது பயணத்தை நீங்கள் அளிக்கும் ஆதரவு மேலும் ஊக்குவிக்கிறது என்றும், பிரகாசமான எதிர்காலத்துக்காக நாம் அனைவரும் ஒன்றாக அணிவகுத்துச் செல்வோம் என தெரிவித்துள்ளார்.

தென்காசி காப்பகத்தில் மேலும் ஒருவர் பலி!

தென்காசி சுந்தரபாண்டியபுரத்தில் தனியார் காப்பகத்தில் கெட்டுப்போன இறைச்சி உணவு சாப்பிட்ட மேலும் ஒரு முதியவர் உயிரிழந்துள்ளார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் (70) என்பவர் சிகிச்சை ... மேலும் பார்க்க

பாஜகவில் நயினார், அண்ணாமலை இடையே போட்டி: அமைச்சர் சேகர் பாபு

பாஜகவில் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை இடையே போட்டி நிலவுவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அண்ணா, பெ... மேலும் பார்க்க

ஜூன் 27, 28ல் அதிமுக ஆலோசனைக் கூட்டம்!

அதிமுக ஐடி பிரிவு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் வருகிற ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் க... மேலும் பார்க்க

ஆ.ராசாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு: விசாரணை வரும் 30ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா உள்ளிட்டோர் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். வருமானத்திற்கு அதிகமாக ரூ. 5.53 கோடி சொத்துகள் சேர்த்ததாக 2015-ல் ஆ.ராசா மீது சிபிஐ வழக்குப்பதிவ... மேலும் பார்க்க

மாம்பழங்களுக்கு ஆதாரவிலை நிர்ணயிக்க வேண்டும்- சீமான்

மாம்பழங்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலையை தமிழ்நாடு அரசு நிர்ணயிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், நடப்பாண்டில் ... மேலும் பார்க்க

ஜூன் 25-ல் ரயில் மூலம் காட்பாடி செல்லும் முதல்வர்!

கள ஆய்வு மேற்கொள்ள நாளை மறுநாள் சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் மூலமாக முதல்வர் ஸ்டாலின் காட்பாடி செல்கிறார். ஜூன் 25, 26 ஆம் தேதிகளில் வேலூர் மற்றும் திருப்பத்தூரில் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு செய்ய... மேலும் பார்க்க