செய்திகள் :

'இந்தியா செல்லும் பெண்களே...' - எச்சரித்த அமெரிக்கா; 'இது வெட்கக்கேடு' - பாஜகவை சாடும் மனோ தங்கராஜ்

post image

சமீபத்தில், இந்தியாவிற்கு சுற்றுலா வரும் அமெரிக்கர்களுக்கு, 'இந்தியாவில் நடக்கும் குற்றங்கள் மற்றும் தீவிரவாதம்' குறித்து எச்சரிக்கப்பட்டிருந்தது.

இது 'இந்தியாவின் பெரும் அவமானம்' என்று குறிப்பிட்டு, அமைச்சர் மனோ தங்கராஜ் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது...

"பாஜக ஆட்சியின் பரிணாமம் = உலக அளவில் இந்தியாவுக்கு அவமானம்!

அமெரிக்கா
அமெரிக்கா

இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க குடிமக்களுக்கு அமெரிக்கா வெளியிட்டிருக்கும் எச்சரிக்கை பட்டியலில் இந்தியாவை Level 2 தரவரிசையில் சேர்த்து கீழ்காணும் வாசகத்தை பதிவிட்டுள்ளது:

அதாவது:-

"இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் குற்றங்களில் ஒன்று பாலியல் வன்கொடுமை; பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கடுமையான குற்றங்கள் சுற்றுலா தலங்கள் மற்றும் பிற இடங்களில் நடக்கின்றன" என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, "பயணிப்பவர் பெண்பாலினத்தவராக இருந்தால், தனியாகப் பயணம் செய்ய வேண்டாம்" எனக் கூறப்பட்டுள்ளது.

இது மிகப்பெரும் வெட்கக்கேடு. இது உலக அரங்கில் இந்தியாவிற்கு பெரும் அவமானம், தலைகுனிவு.

பிரதமர் மோடி தன்னால் இயன்றவரை இந்தியாவை அனைத்து தளங்களிலும் பின்னோக்கி இழுத்து கொண்டு செல்கிறார். 15 ஆண்டுகள் இந்த ஆட்சி தொடர்ந்தால் இந்தியா 50 ஆண்டுகள் பின்னோக்கி நகரும்.

மத கலவரம், கலாசார செருக்கு, வெறுப்பு பேச்சு, வீண் விளம்பரங்கள் போன்ற முட்டாள்தனங்களுக்கு பாஜக அரசு செலுத்தும் அக்கறையை நாட்டின் முன்னேற்றத்திலும், பாதுகாப்பிலும் காண்பிக்க வேண்டும்".

``விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட ஆசை; இருந்தாலும்..!” - அதிமுக மாஃபா. பாண்டியராஜன்

விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா.க.பாண்டியராஜன் கூறுகையில், ``விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சி அதிமுக ஆட்சி காலத்தில் சிஏபி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்... மேலும் பார்க்க

சதாம் ஹுசேனின் வீழ்ச்சியால் பலன் பெற்ற ஈரான்; புதிய எதிரிகள் உருவானதெப்படி? - களம் 3: Iran vs Israel

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்) மேனாள் ஆசிரியர் , பிபிசி உலகசேவைகட்டுரையாளர்... மேலும் பார்க்க

பாராமதி சர்க்கரை ஆலையை கைப்பற்றபோது யார்? - அஜித் பவர் - சரத் பவார் இடையே கடும் போட்டி!

மகாராஷ்டிராவில் கடந்த 2023-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் இரண்டாக உடைந்த பிறகு துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் கட்சியின் நிறுவனர் சரத் பவார் இடையே பாராமதியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதில் கட... மேலும் பார்க்க

Syria : சிரியா தேவாலயத்தில் தற்கொலைப் படை தாக்குதல்; 'இவர்கள் தான் காரணம்' கைக்காட்டும் சிரிய அரசு

நேற்று சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை நடந்துகொண்டு இருந்திருக்கிறது. அப்போது அங்கு தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது கிடைத்துள்ள தரவுகளின் படி, இந்த... மேலும் பார்க்க

ஆ.ராசா முன் அடுக்கப்பட்ட புகார்கள்; "திமுகவில் இது சாதாரணம்" - என்ன சொல்கிறார் பெரம்பூர் எம்எல்ஏ?

தேர்தல் நடைமுறைகள் தொடங்க இன்னும் சில மாதங்களே இருக்கும் சூழலில் அரசியல் கட்சிகள் அதற்கு ஆயத்தமாகும் வகையில் வேலைகளை இப்போதே தொடங்கி விட்டன.ஆளும் திமுகவில் மாவட்ட அளவில் கட்சியின் நடப்பு நிலவரத்தைக் க... மேலும் பார்க்க