செய்திகள் :

பெரியார், அண்ணாவை விமர்சிக்கும் விடியோவை தவிர்த்திருக்கலாம்: ராஜேந்திர பாலாஜி

post image

முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாவை விமர்சிக்கும் வகையில் விடியோ வெளியிட்டது வருத்தமளிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

முருக பக்தா்களை ஒருங்கிணைக்கும் நோக்கில், இந்து முன்னணி சாா்பில் மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பெரியார், அண்ணாவை விமர்சிக்கும் வகையில் இந்து முன்னணி குறித்த ஒரு விடியோ ஒளிபரப்பப்பட்டது.

இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா? என்று திமுக உள்ளிட்ட கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் விருதுநகரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று செய்தியாளர்களுடன் பேசுகையில்,

"முருகர் மாநாட்டில் வெளியிட்ட அந்த விடியோவை தயாரித்தது யார் என்று தெரியவில்லை. அடித்தட்டு மக்களை அதிகாரத்திற்கு கொண்டுவந்தவர் பேரறிஞர் அண்ணா. அதேபோல பெரியாரின் சமூக சீர்திருத்த கருத்துகள் நிறைய இருக்கின்றன. அது சிலருக்கு பிடிக்கலாம், சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். அதன் வெளிப்பாடாக அந்த விடியோ இருக்கலாம்.

அண்ணா பல்வேறு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை சட்டப்பேரவை வரை கொண்டுவந்தவர். அண்ணாவின் கொள்கையை முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா பின்பற்றியதால்தான் நானும் சட்டப்பேரவைக்குச் சென்று அமைச்சரானேன்.

அண்ணா இல்லையெனில் என்னைப் போன்ற நபர்கள் அரசியலுக்கு வந்திருக்க முடியாது.

முருக பக்தர்கள் மாநாட்டில் நடந்த ஒரு நிகழ்வை வைத்து அதன் 99% நல்ல கருத்துகளை புறக்கணிக்க முடியாது. எனினும் பெரியார், அண்ணாவை சிறுமைப்படுத்தும் வகையில் விடியோ வெளியிட்டது வருத்தமளிக்கிறது. அந்த விடியோவை தவிர்த்திருக்கலாம்" என்று பேசியுள்ளார்.

ஈரானின் 6 விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! புதினை சந்திக்கும் ஈரான் அமைச்சர்

பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக இன்று காலை சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்க... மேலும் பார்க்க

தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழகம் முழுவதும் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்களும் மாற்றப்பட்டுள்ளனர். 55 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கி தமிழக அரசு... மேலும் பார்க்க

பெரியார், அண்ணா பற்றிய விமர்சனம்: அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கேள்வி

மதுரையில் நடைபெற்ற முருகப் பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா பற்றி விமர்சனம் செய்ததை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கேட்டுக்கொண்டு இருந்தது ஏன்? என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.கீழடி... மேலும் பார்க்க

மேட்டூர் அணை 16 கண் மதகு பாலத்தில் பராமரிப்புப் பணி: சென்னை ஐஐடி பேராசிரியர் ஆய்வு

சேலம் : மேட்டூர் அணையின் 16 கண் மதகு பாலம் பகுதியில் நடைபெற்றுவரும் பராமரிப்புப் பணிகளை சென்னை ஐ.ஐ.டி. கட்டடவியல் துறை பேராசிரியர் அழகு சுந்தரமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவ... மேலும் பார்க்க

குழந்தை கடத்தல் கும்பல் கைது! வாங்கியோர், விற்றோர் விவரங்கள் சேகரிப்பு!!

சேலம் : கொங்கு மண்டலத்தில் குழந்தைகளை வாங்கி விற்பனையில் ஈடுபட்டு வந்த 6 பேர் கொண்ட கும்பல் சேலத்தில் கைது செய்யப்பட்டனர்.சேலம் நகர ஜோதிபட்டியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் 43. இவர் மீது பண மோசடி புகார் தொட... மேலும் பார்க்க

போதைப்பொருள் விவகாரம் - ஸ்ரீகாந்திடம் விசாரணை

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்திடம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத்திடம் இருந்து நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வாங... மேலும் பார்க்க