செய்திகள் :

வகுப்பறையில் பாடம் நடத்தாமல், குறட்டை விட்டு தூங்கிய ஆசிரியர்; வைரலான வீடியோவால் வேலைக்கு சிக்கல்!

post image

மகாராஷ்டிராவில் கிராமங்களில் இருக்கும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களும் சரியாக பாடம் கற்றுக்கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அங்குள்ள ஜால்னா மாவட்டத்தில் இருக்கும் கடேகாவன் என்ற கிராமத்தில் இருக்கும் மராத்தி மீடிய அரசு பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் கே.முண்டே. இவர் வகுப்பறைக்கு வந்த பிறகு மாணவர்களுக்கு பாடம் எடுக்காமல் அப்படியே இருக்கையில் சாய்ந்து படுத்தார். அதோடு காலை தூக்கி டேபிளில் போட்டுக்கொண்டு ''இன்னும் என்ன தாமதம்'' என்று நினைத்துக்கொண்டு அப்படியே நிம்மதியாக தூங்க ஆரம்பித்தார். மாணவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். ஆசிரியர் தூங்க ஆரம்பித்தபோது வகுப்பில் 15 முதல் 20 மாணவர்கள் இருந்தனர்.

ஆசிரியர் உறங்க ஆரம்பித்த சிறிது நேரத்தில் குறட்டைவிட ஆரம்பித்தார். அந்நேரம் அந்த வழியாக வந்த ஒருவர் ஆசிரியர் உறங்கிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டார். உடனே வகுப்பறைக்குள் வந்த அந்த நபர் மாணவர்களிடம் ஆசிரியர் எவ்வளவு நேரமாக தூங்கிக்கொண்டிருக்கிறார் என்று கேட்டார். அதற்கு மாணவர்கள் அரை மணி நேரமாக உறங்குவதாக தெரிவித்தனர். வெளியில் இருந்து வந்த நபர் ஆசிரியர் உறங்கிக்கொண்டிருந்ததை தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துக்கொண்டார். அந்த நபர் வகுப்பில் இருந்தபோதே ஆசிரியர் கை, கால்களை ஆட்டிக்கொண்டு உறக்கத்தில் இருந்து எழுந்தார். வகுப்பில் தூங்கி பிடிபட்டுக்கொண்டோமே என்ற கவலை அவரிடம் தென்படவில்லை. அவர் உறங்கிய வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவியது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் முண்டே மீது உயர் அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது. இப்புகார் குறித்து மண்டல கல்வி அதிகாரி சதீஷ் ஷிண்டே அளித்த பேட்டியில், ''சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். இச்சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அரசு அதிகாரிகள் இது போன்ற கிராம பள்ளிகளில் அடிக்கடி பார்வையிடவேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடையாள அட்டை இல்லை; மும்பை ஐ.ஐ.டி வகுப்பறையில் வாலிபர் - விசாரணையில் ஆச்சர்யமடைந்த போலீஸ்

மும்பை விமான நிலையத்தின் ஓடுதளத்திற்குள் நேற்று முன் தினம் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்துவிட்டார். அதேபோன்று மும்பை ஐ.ஐ.டிக்குள் மர்ம நபர் அத்துமீறி நுழைந்துள்ளார். மும்பை ஐ.ஐ.டி வளாகத்திற்குள் இ... மேலும் பார்க்க

குஜராத்: புல்லட் மீது தீராத காதல்... விபத்தில் இறந்த வாலிபரின் உடலுடன் புல்லட்டும் சேர்த்து அடக்கம்

குஜராத் மாநிலம் கேதா மாவட்டத்தில் உள்ள உத்தர்சந்தா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கிரிஷ் பார்மர்(18). இவருக்கு ராயல் எல்பீல்டு புல்லட் பைக் என்றால் மிகவும் பிடிக்கும்.எங்குச் சென்றாலும் அவர் தனது புல்லட்... மேலும் பார்க்க

நடுவானில் மோசமான உடல்நிலை; சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மீது வழக்கு தொடர்ந்த மருத்துவர் - என்ன நடந்தது?

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் மருத்துவர், விமானத்தில் பயணித்தபோது உணவு ஒவ்வாமை ஏற்பட்டதையடுத்து அவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மீது வழக்குப்பதிவு தொடர்ந்துள்ளார்.தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியின் படி, நியூயா... மேலும் பார்க்க

டெல்லி: மெட்ரோ ரயிலில் பாம்பு இருந்ததாக அலறிய பெண்களின் வீடியோ வைரல்; DMRC-யின் விளக்கம் என்ன?

டெல்லி மெட்ரோவின் பெண்கள் ரயில் பெட்டிக்குள் ஒரு பாம்பு வந்ததாகவும் அதனை கண்டு பயணிகள் அலறியடித்து சத்தம் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.மெட்ரோ ரயில் பலரும் பயன்படுத்தக்கூடிய ஒரு போக்குவரத்தா... மேலும் பார்க்க

2006-ல் நிலத்தை விற்ற தந்தை; நில உரிமையாளரிடம் 19 ஆண்டுபின் இழப்பீடு கோரும் மகள் - என்ன நடந்தது?

பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் 2006 ஆம் ஆண்டு தனது நிலத்தை ஒருவருக்கு பெற்றுள்ளார். விற்றவரின் மகள் 19 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதைய உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இரண்டு தசாப்தங்களுக்கு ம... மேலும் பார்க்க

மகனுக்கு பெண்பார்க்க சென்றபோது நெருக்கம் - வருங்கால மருமகளை திருமணம் செய்த 6 குழந்தைகளின் தந்தை

உத்தரப்பிரதேச மாநிலத்தில், தனது மகனுக்கு பார்த்த பெண்ணை தானே ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள ராம்பூர் என்ற இடத்தை சேர்ந்தவர் சகீல். இவருக்கு திருமணமாகி 6 பிள்ளைகள் இருக்க... மேலும் பார்க்க