செய்திகள் :

அடையாள அட்டை இல்லை; மும்பை ஐ.ஐ.டி வகுப்பறையில் வாலிபர் - விசாரணையில் ஆச்சர்யமடைந்த போலீஸ்

post image

மும்பை விமான நிலையத்தின் ஓடுதளத்திற்குள் நேற்று முன் தினம் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்துவிட்டார். அதேபோன்று மும்பை ஐ.ஐ.டிக்குள் மர்ம நபர் அத்துமீறி நுழைந்துள்ளார். மும்பை ஐ.ஐ.டி வளாகத்திற்குள் இருந்த அலுவலகத்திற்குள் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரிடம் அடையாள அட்டையை காட்டும்படி அங்கிருந்த பேராசிரியர் ஒருவர் கேட்டார். அவ்வாறு கேட்டவுடன் அந்த நபர் அங்கிருந்து ஓடிவிட்டார். உடனே இது குறித்து செக்யூரிட்டிகள் உஷார்படுத்தப்பட்டனர். ஐ.ஐ.டி முழுவதும் அவரைத் தேடினர். அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இறுதியாக வகுப்பு ஒன்றில் அமைதியாக இருந்து அந்த நபர் பாடத்தை கவனித்துக்கொண்டிருந்தார். அவரைப் பிடித்து விசாரித்தபோது அவரது பெயர் பிலால் என்றும், மங்களூரைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் ஐ.ஐ.டிக்கு ஒரு நாள் கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொள்ள வந்துள்ளார்.

mumbai iit

அதன் பிறகு அவர் அங்கிருந்து செல்லவே இல்லை. ஜூன் 2ம் தேதியில் இருந்து 7ம் தேதி வரையும், பின்னர் 10ம் தேதியில் இருந்தும் ஐ.ஐ.டி வளாகத்தில் வசித்து வந்தது அவரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து போலீஸ் துணை கமிஷனர் தத்தா நலவாடே கூறுகையில்,''பிடிபட்ட நபரின் நடவடிக்கையில் எந்த வித சந்தேகமும் இல்லை. இன்ஜினீயரிங் கிளாஸில் கலந்து கொள்ளவேண்டும் என்பதற்காக அவர் ஐ.ஐ.டி வளாகத்தில் தங்கி இருந்து இன்ஜினீயரிங் கிளாஸ் நடக்கும்போது அதில் கலந்து கொண்டுள்ளார்''என்றார். எந்த வித அடையாள அட்டையும் இல்லாமல் மர்ம நபர் ஒருவர் ஐ.ஐ.டி வகுப்புகளில் கலந்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வகுப்பறையில் பாடம் நடத்தாமல், குறட்டை விட்டு தூங்கிய ஆசிரியர்; வைரலான வீடியோவால் வேலைக்கு சிக்கல்!

மகாராஷ்டிராவில் கிராமங்களில் இருக்கும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களும் சரியாக பாடம் கற்றுக்கொடுப்பதில்லை என்... மேலும் பார்க்க

குஜராத்: புல்லட் மீது தீராத காதல்... விபத்தில் இறந்த வாலிபரின் உடலுடன் புல்லட்டும் சேர்த்து அடக்கம்

குஜராத் மாநிலம் கேதா மாவட்டத்தில் உள்ள உத்தர்சந்தா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கிரிஷ் பார்மர்(18). இவருக்கு ராயல் எல்பீல்டு புல்லட் பைக் என்றால் மிகவும் பிடிக்கும்.எங்குச் சென்றாலும் அவர் தனது புல்லட்... மேலும் பார்க்க

நடுவானில் மோசமான உடல்நிலை; சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மீது வழக்கு தொடர்ந்த மருத்துவர் - என்ன நடந்தது?

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் மருத்துவர், விமானத்தில் பயணித்தபோது உணவு ஒவ்வாமை ஏற்பட்டதையடுத்து அவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மீது வழக்குப்பதிவு தொடர்ந்துள்ளார்.தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியின் படி, நியூயா... மேலும் பார்க்க

டெல்லி: மெட்ரோ ரயிலில் பாம்பு இருந்ததாக அலறிய பெண்களின் வீடியோ வைரல்; DMRC-யின் விளக்கம் என்ன?

டெல்லி மெட்ரோவின் பெண்கள் ரயில் பெட்டிக்குள் ஒரு பாம்பு வந்ததாகவும் அதனை கண்டு பயணிகள் அலறியடித்து சத்தம் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.மெட்ரோ ரயில் பலரும் பயன்படுத்தக்கூடிய ஒரு போக்குவரத்தா... மேலும் பார்க்க

2006-ல் நிலத்தை விற்ற தந்தை; நில உரிமையாளரிடம் 19 ஆண்டுபின் இழப்பீடு கோரும் மகள் - என்ன நடந்தது?

பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் 2006 ஆம் ஆண்டு தனது நிலத்தை ஒருவருக்கு பெற்றுள்ளார். விற்றவரின் மகள் 19 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதைய உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இரண்டு தசாப்தங்களுக்கு ம... மேலும் பார்க்க

மகனுக்கு பெண்பார்க்க சென்றபோது நெருக்கம் - வருங்கால மருமகளை திருமணம் செய்த 6 குழந்தைகளின் தந்தை

உத்தரப்பிரதேச மாநிலத்தில், தனது மகனுக்கு பார்த்த பெண்ணை தானே ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள ராம்பூர் என்ற இடத்தை சேர்ந்தவர் சகீல். இவருக்கு திருமணமாகி 6 பிள்ளைகள் இருக்க... மேலும் பார்க்க