செய்திகள் :

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் ஸ்ரீகாந்த் சிக்கியது எப்படி?

post image

போதைப்பொருள் பயன்படுத்தியது மருத்துவப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டு நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பாக அதிமுக நிர்வாகி பிரதீப் சென்னையில் உள்ள தனியார் மதுபானக் கூடத்தில் நடந்த அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இவரது செல்ஃபோனை பறிமுதல் செய்த காவல்துறையினர் அதில் உள்ள வாட்ஸ்ஆப் எண்ணை சோதனை செய்தபோது, அதிமுக முன்னாள் நிர்வாகி பிரதீப்புடன், நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வாங்கியதாகவும் தரவுகள் கிடைத்துள்ளது.

பிரதீப்பை கைது செய்த காவல்துறையினர், இது குறித்து விசாரணை செய்துள்ளனர். அதில் பிரதீப் இடம் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வாங்குவது குறித்து பேசிய தகவல்களும் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் இன்று காலை 8 மணி அளவில் நடிகர் ஸ்ரீகாந்த்தை காவல்துறையினர். விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள F3 காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

முதல் கட்டமாக, ஸ்ரீகாந்த்திடம் விசாரணை நடத்தினர். அதன் பின்னர், அவர் போதைப்பொருள் பயன்படுத்தி உள்ளாரா என்பதை அறிவியல் பூர்வமாக ஆய்வு மேற்கொள்ள சென்னை மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் உள்ள மருத்துவமனையில் அவரை மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர்.

மேலும், ஆய்வு முடிவுகளில் ஶ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் ஸ்ரீகாந்த், பிரதீப் என்கிற நபரிடம் போதைப்பொருளை கிராம் ஒன்றுக்கு 12 ஆயிரம் ரூபாய் வீதம் வாங்கி இருக்கிறார்.

பிரதீப் வாக்குமூலத்தில் ஸ்ரீகாந்த் 40 முறை போதைப்பொருள் வாங்கி உள்ளதாகவும் அதற்கான பணத்தை பிரதீப்புக்கு ஸ்ரீகாந்த்துக்கு அனுப்பி உள்ளார். அதன் அடிப்படையில் நான்கு லட்சத்தி 72 ஆயிரம் ரூபாய் பண பரிவர்த்தனை நடந்துள்ளது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க: பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது!

கூலி படத்தின் முதல் பாடல் அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘கூலி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான ‘கூலி’-ஐ பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ... மேலும் பார்க்க

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விஜய் டிவி சீரியல்கள்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரு தொடர்கள் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளன. ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற முத்தழகு, தென்றல் வந்து என்னைத்தொடும் ஆகிய இரு தொடர்கள் கலர்ஸ் தொலைக்க... மேலும் பார்க்க

அண்ணா தொடரில் இணையும் சின்ன மருமகள் நடிகை!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அண்ணா தொடரில் சின்ன திரை நடிகை சோஃபியா இணையவுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சின்ன மருமகள் தொடரில் சோஃபியா நடித்து வரும் நிலையில், புதிய தொடர... மேலும் பார்க்க

உணவகத்தில் ரசிகைகளை சந்தித்த சீரியல் நடிகை மதுமிதா!

சின்ன திரை நடிகை மதுமிதா உணவகத்தில் ரசிகைகளை சந்தித்து உரையாடிய புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. உணவகத்தில் உணவு உட்கொண்டு இருந்தபோது தன்னிடம் பேசவந்த பள்ளி மாணவிகளை காக்க வைக்காம... மேலும் பார்க்க

டாப் குக்கு டூப் குக்கு - 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார்? யார்?

வெங்கடேஷ் பட் நடுவராக பங்கேற்கும் ’டாப் குக் டூப் குக்கு’ என்ற சமையல் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசனில் பங்கேற்கவுள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து ... மேலும் பார்க்க