செய்திகள் :

போதைப்பொருள் விவகாரம்: கைதான நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவப் பரிசோதனை

post image

நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் இன்று(ஜூன் 23) கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பின், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று அதிகரிகள் தெரிவித்தனர்.

நடந்தது என்ன?

கடந்த சில நாள்களுக்கு முன்பாக அதிமுக நிர்வாகி பிரதீப் சென்னையில் உள்ள தனியார் மதுபானக் கூடத்தில் நடந்த அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இவரது செல்ஃபோனை பறிமுதல் செய்த காவல்துறையினர் அதில் உள்ள வாட்ஸ்ஆப் எண்ணை சோதனை செய்தபோது, அதிமுக முன்னாள் நிர்வாகி பிரதீப்புடன், நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வாங்கியதாக தரவுகள் கிடைத்துள்ளது.

இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில், பிரதீப் அளித்துள்ள வாக்குமூலத்தில் ஸ்ரீகாந்த் 40 முறை போதைப்பொருள் வாங்கி உள்ளதாகவும் அதற்கான பணத்தை பிரதீப்புக்கு ஸ்ரீகாந்த் அனுப்பி உள்ளார் என்றும் தெரிவித்தார். மொத்தம் 4 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன் அடிப்படையில், இன்று(ஜூன் 23) காலை 8 மணி அளவில் நடிகர் ஸ்ரீகாந்த்தை காவல்துறையினர் விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்தனர்.

அப்போது அவர் போதைப்பொருள் பயன்படுத்தினாரா என்பதை உறுதிசெய்ய அறிவியல் பூர்வமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சென்னை மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் உள்ள மருத்துவமனையில் அவரை மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தி பரிசோதனை செய்ததில், ஆய்வு முடிவுகளில் ஶ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானது. இந்தநிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

3 தொகுதிகளின் நிா்வாகிகளுடன் முதல்வா் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளின் திமுக நிா்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவரான முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா். அம்பாசமுத்திரம், செங்கல்பட்டு, நாகா்கோவில் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளைச்... மேலும் பார்க்க

கொள்கையை எப்போதும் விட்டுத்தரமாட்டார் இபிஎஸ்: முன்னாள் அமைச்சர் வேலுமணி

கொள்கையை எப்போதும் எடப்பாடி பழனிசாமி விட்டுக்கொடுக்கமாட்டார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.முருகன் மாநாடு குறித்து முன்னாள் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் தெரிவித... மேலும் பார்க்க

திமுகவில் புதிதாக 2 அணிகள் உருவாக்கம்! நிர்வாகிகள் நியமனம்!

திமுகவில் புதிதாக கல்வியாளர்கள் அணி மற்றும் மாற்றுத்திறனாளிகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் சமீபத்தில் நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் திமுகவில் புதியதாக கல்வியாளர்கள் அணி மற்றும் மாற்றுத்... மேலும் பார்க்க

நீட் தேர்வில் பணம்தான் விளையாடுகிறது: மு.க. ஸ்டாலின்

நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.2025 இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் முறைகேடு செய்து, பணத்தை பெற்றுக்கொண்டு... மேலும் பார்க்க

முருக பக்தர்கள் மாநாட்டு தீர்மானங்களை ஏற்கவில்லை: அதிமுக

முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கவில்லை என அதிமுக அறிவித்துள்ளது. மாநாட்டில், பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் பற்றி வெளியிடப்பட்ட விடியோ என்பது துளியும் ஏற்றுக்கொள்ள முடியா... மேலும் பார்க்க

குண்டர் தடுப்புச் சட்டத்துக்குள் சைபர் குற்றவாளிகள்: தமிழக அரசின் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் வரவேற்பு

தமிழகத்தில் இணையவழி (சைபர்) குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையாக அத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை உ... மேலும் பார்க்க