செய்திகள் :

குண்டர் தடுப்புச் சட்டத்துக்குள் சைபர் குற்றவாளிகள்: தமிழக அரசின் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் வரவேற்பு

post image

தமிழகத்தில் இணையவழி (சைபர்) குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையாக அத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை உச்சநீதிமன்றம் வரவேற்றுள்ளது.

தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் பானுமதி என்பவரிடம் இணையவழியில் ரூ.84.50 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட பஞ்சாபைச் சேர்ந்தவொரு நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கடந்தாண்டு ஜூலையில் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில், இதனை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றத்தால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்த மனு நீதிபதி சந்தீப் மேத்தா, ஜோய்மால்யா பாக்சி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அதில், இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம், அரசின் இந்த நடவடிக்கையானது வரவேற்கத்தக்கதொரு நகர்வு என்றும், வழக்கமான குற்றவியல் சட்டங்களால் குற்றவாளிகளைத் தடுக்க பயனளிக்காதபோது, அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்வது மிக நல்லதொரு நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொள்கையை எப்போதும் விட்டுத்தரமாட்டார் இபிஎஸ்: முன்னாள் அமைச்சர் வேலுமணி

கொள்கையை எப்போதும் எடப்பாடி பழனிசாமி விட்டுக்கொடுக்கமாட்டார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.முருகன் மாநாடு குறித்து முன்னாள் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் தெரிவித... மேலும் பார்க்க

திமுகவில் புதிதாக 2 அணிகள் உருவாக்கம்! நிர்வாகிகள் நியமனம்!

திமுகவில் புதிதாக கல்வியாளர்கள் அணி மற்றும் மாற்றுத்திறனாளிகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் சமீபத்தில் நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் திமுகவில் புதியதாக கல்வியாளர்கள் அணி மற்றும் மாற்றுத்... மேலும் பார்க்க

நீட் தேர்வில் பணம்தான் விளையாடுகிறது: மு.க. ஸ்டாலின்

நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.2025 இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் முறைகேடு செய்து, பணத்தை பெற்றுக்கொண்டு... மேலும் பார்க்க

முருக பக்தர்கள் மாநாட்டு தீர்மானங்களை ஏற்கவில்லை: அதிமுக

முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கவில்லை என அதிமுக அறிவித்துள்ளது. மாநாட்டில், பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் பற்றி வெளியிடப்பட்ட விடியோ என்பது துளியும் ஏற்றுக்கொள்ள முடியா... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 11 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று(ஜூன் 23)தமிழகத்தில் ஒருசில இட... மேலும் பார்க்க

பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக இன்று காலை சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்க... மேலும் பார்க்க