செய்திகள் :

ஆப்பிரிக்கா டு மும்பை; வயிற்றில் கடத்திவரப்பட்ட aரூ.10 கோடி கொக்கைன்... சோதனையில் சிக்கிய நபர்!

post image

மும்பைக்கு வயிற்றில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து இருக்கிறது. வயிற்றில் போதைப்பொருளை எடுத்து வரும்போது அது தொடர்பாக முன்கூட்டியே விமான நிலைய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட நபர் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார். அவ்வாறு தகவல் கிடைக்கவில்லையெனில் போதைப்பொருள் மும்பைக்குள் கடத்தி வரப்பட்டுவிடுகிறது. தற்போது நைஜீரியாவை சேர்ந்த ஒருவர் 1.2 கிலோ எடையுள்ள கொகைன் போதை மாத்திரைகளை வாய்வழியாக விழுங்கி மும்பைக்கு எடுத்து வந்தது, விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த அனி சார்லஸ் என்பவர் போதைப்பொருள் கடத்தி வருவதாக விமான நிலைய வருவாய் புலனாய்வுத்துறைக்கு முன்கூட்டியே ரகசிய தகவல் கிடைத்தது.

சித்திரிப்புப் படம்

அனி சார்லஸ் வந்தபோது அவரது உடமைகள் மற்றும் அவரது உடலை சோதித்து பார்த்தபோது அவரிடம் எந்த விதமான போதைப்பொருளும் இல்லை. ஆனால் போதைப்பொருள் தொடர்பாக ரகசிய தகவல் கிடைத்து இருப்பதால் அந்த நபரை ஜெ.ஜெ மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது வயிற்றில் போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவை வயிற்றில் இருந்து அகற்றப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.10 கோடியாகும். மொத்தம் 67 மாத்திரைகள் வயிற்றில் இருந்தது. இதே போன்று தாய்லாந்தில் இருந்து வந்த இரண்டு பேர் ஹைட்ரோபோனிக் முறையில் வளர்க்கப்பட்ட கஞ்சாவை கடத்தி வந்தனர். அக்பர் அன்சாரி, இப்ராகிம் அன்சாரி ஆகிய அந்த இரண்டு பயணிகள் கொண்டு வந்த பேக்கை முழுமையாக சோதித்து பார்த்தபோது அதில் 12 கிலோ கஞ்சா இருந்தது. அவற்றின் மதிப்பு 12 கோடியாகும். மும்பையில் அவற்றை டெலிவரி செய்ய எடுத்து வந்திருந்தனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் இருந்துதான் அதிக அளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுகிறது. போதைப்பொருளை கடத்தி வருபவர்கள் பெரும்பாலும் மாணவர் விசாவில் வருவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதோடு போதைப்பொருளை எடுத்து வரக்கூடியவர்களை கடத்தல்காரர்கள் மிகவும் நேர்த்தியான முறையில் தேர்வு செய்கின்றனர். போதைப்பொருளை எடுத்து வருபவர்கள் ஆரோக்கியமானவர்களாகவும், ஒல்லியாகவும் இருக்கக்கூடியவர்களை கடத்தல்காரர்கள் அதிக அளவில் தேர்வு செய்கின்றனர். ஆரோக்கியமாக இருப்பவர்களால்தான் அதிக அளவில் போதைப்பொருள் மாத்திரைகளை வயிற்றில் சுமந்து வர முடியும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இது குறித்து குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் மதன் கூறுகையில், ''போதைப்பொருளை எடுத்து வருபவர்கள் பெரும்பாலும் மாணவர் விசாவில்தான் வருகின்றனர். அதற்கான ஆதாரம் கிடைத்து இருக்கிறது. போதைப்பொருளை எடுத்து வருபவர்கள் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும்போது 20 மணி நேரம் வரை பயணம் செய்கின்றனர். இப்பயணத்தின் போது வயிற்றில் இருக்கும் போதைப்பொருள் மாத்திரைகள் வெடிக்காமல் இருக்க அவர்கள் எதுவும் சாப்பிடவோ அல்லது தண்ணீர் போன்ற நீர் உணவுகளை எடுத்துக்கொள்வதோ கிடையாது. அவர்கள் மும்பை வந்தவுடன் லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து அனைத்து மாத்திரைகளையும் வயிற்றில் இருந்து வெளியில் எடுத்து அதனை டெலிவரி செய்யவேண்டிய நபர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

பல வழிகளில் அவற்றை நாடு முழுவதும் அனுப்பி விடுகின்றனர். மீரா ரோட்டில் ரூ 22 கோடி மதிப்பு கொகைன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட கிங்ஸ்லி என்பவரிடம் நடத்திய விசாரணையில்தான் அவர்கள் எப்படி வெளிநாட்டில் இருந்து போதைப்பொருளை இந்தியாவிற்கு கடத்தி வருகின்றனர் என்ற விபரம் தெரிய வந்தது. இப்போது எத்தனை பேர் மும்பைக்கு போதைப்பொருளை எடுத்து வரும் வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்'' என்று தெரிவித்தார். போதைப்பொருள்களில் கொகைன் அதிக விலையுள்ளது. அவற்றை ஆப்பிரிக்க பிரஜைகள் வெளிநாடுகளில் இருந்து மும்பைக்கு கடத்தி வந்து நாடு முழுவதும் சப்ளை செய்கின்றனர்.

மும்பை: குப்பைத் தொட்டி அருகே மீட்கப்பட்ட மூதாட்டி; விட்டுச் சென்ற பேரன் குறித்து போலீஸ் விசாரணை!

மும்பை கோரேகாவ் ஆரே காலனி பகுதியில் குப்பை தொட்டி அருகில் வயதான மூதாட்டி ஒருவர் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. உடனே போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீஸார் வந்தபோது 60 முதல் 70 வயது... மேலும் பார்க்க

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த்திடம் போலீஸார் விசாரணை; வளையத்தில் மேலும் ஒரு நடிகர்!?

தமிழ் சினிமாவில் `ரோஜா கூட்டம்', `மனசெல்லாம்', `பார்த்திபன் கனவு', `நண்பன்' உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் ஸ்ரீகாந்த், போதைப்பொருள் பயன்படுத்தியாக சென்னை நுங்கம்பாக்கம் போலீஸார் அவரை விசாரித்த... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயில்: பாஜக எம்எல்ஏ-க்கு சீட் கொடுக்க மறுத்தவர் மீது தாக்குதல்.. உ.பி.,யில் அதிர்ச்சி

நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் குறுகிய தூரத்திற்குள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் இருக்கை வசதி மட்டுமே இருக்கிறது. அடுத்த கட்டமாக படுக்கை வசதியுடன் கூடிய வந்தே ... மேலும் பார்க்க

``நீட் மதிப்பெண் குறைந்து விட்டது'' - மகளை அடித்தே கொன்ற ஆசிரியர்.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை அவரது தந்தை அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரா சாங்கிலி மாவட்டத்தில் உள்ள நெல்கரஞ்சி என்ற கிராமத்தை சேர்ந்... மேலும் பார்க்க

ஜெகன் மோகன் ரெட்டி கார் டயரில் சிக்கி உயிரிழந்த தொண்டர் - என்னென்ன பிரிவுகளில் வழக்கு?

கடந்த ஜூன் 18-ம் தேதி, ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ரெண்டபல்லா எனும் கிராமத்திற்கு சென்றிருக்கிறார். ஒரு ஆண்டிற்கு முன்பு, தற்கொலை செய்துகொண்ட தன் கட்சி தலைவர் ஒருவரின் குடும்பத்தை ... மேலும் பார்க்க

ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பெண்; அவமானப்படுத்திய கும்பல்? - விபரீத முடிவெடுத்த பெண்

கேரள மாநிலம் கண்ணூர் காயலோடு பகுதியைச் சேர்ந்தவர் ரஷீதா(40). இவர் கடந்த 17-ம் தேதி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தகவலின்பேரில் அங்குசென்ற பினராயி காவல்நிலை... மேலும் பார்க்க