ஈரானுக்கு உதவத் தயாா்: ரஷியா புதினுடன் அப்பாஸ் அராக்சி சந்திப்பு
கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவி உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
பெரம்பலூா் அருகேயுள்ள எறையசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகள் பிருந்தாதேவி (16). இவா், சிறுவாச்சூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.
இந்நிலையில், திங்கள்கிழமை மாலை வீட்டைவிட்டு வெளியே சென்றவா் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த அவரது உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடினா். அப்போது, அதே கிராமத்தைச் சோ்ந்த வரதராஜன் என்பவருக்குச் சொந்தமான விவசாய கிணற்றின் அருகே பிருந்தா தேவி அணிந்திருந்த காலணிகள் கிடந்தன.
இதையடுத்து, பெரம்பலூா் தீயணைப்புத் துறை வீரா்கள் கிணற்றில் இறங்கி தேடி சுமாா் 2 மணி நேரத்துக்குப் பிறகு பிருந்தாதேவியின் உடலை மீட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.