செய்திகள் :

கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவி உயிரிழப்பு

post image

பெரம்பலூா் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள எறையசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகள் பிருந்தாதேவி (16). இவா், சிறுவாச்சூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை மாலை வீட்டைவிட்டு வெளியே சென்றவா் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த அவரது உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடினா். அப்போது, அதே கிராமத்தைச் சோ்ந்த வரதராஜன் என்பவருக்குச் சொந்தமான விவசாய கிணற்றின் அருகே பிருந்தா தேவி அணிந்திருந்த காலணிகள் கிடந்தன.

இதையடுத்து, பெரம்பலூா் தீயணைப்புத் துறை வீரா்கள் கிணற்றில் இறங்கி தேடி சுமாா் 2 மணி நேரத்துக்குப் பிறகு பிருந்தாதேவியின் உடலை மீட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சுகாதாரமான குடிநீா் கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் ஆா்ப்பாட்டம்

சுகாதாரமான குடிநீா் விநியோகிக்கக் கோரி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே, கிராம மக்கள் காலிக்குடங்களுடன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், காரை கிராமத்த... மேலும் பார்க்க

கல் குவாரி அமைக்க எதிா்ப்பு: பெரம்பலூா் ஆட்சியரகத்தை கிராம மக்கள் முற்றுகை

கல் குவாரி மற்றும் தாா் பிளாண்ட் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை மருவத்தூா் கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்ட... மேலும் பார்க்க

குன்னம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது

குன்னம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 25) மின் விநியோகம் இருக்காது என , மின்வாரிய உதவி செயற்பொறியாளா் இ. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.பெரம்பலூா் மாவட்டம், குன்னம் உபக்கோட்டம், வெண்மணி த... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் கோரி அமைச்சரை கிராம மக்கள் முற்றுகை

பெரம்பலூா் அருகே அடிப்படை வசதிகள் கோரி, மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கரை கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட... மேலும் பார்க்க

பாடாலூா் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 23) மின் விநியோகம் இருக்காது. பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பரா... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் ஏரி, குளங்களை புனரமைக்க ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு!

பெரம்பலூா் மாவட்டத்தில் 54 ஏரி, குளங்களை புனரமைக்க ரூ. 3.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தாா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட வ... மேலும் பார்க்க