செய்திகள் :

சமாஜவாதி கட்சியில் இருந்து 3 எம்எல்ஏக்கள் நீக்கம்

post image

லக்னௌ: உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி கட்சியில் இருந்து 3 எம்எல்ஏக்கள் திங்கள்கிழமை நீக்கப்பட்டனா். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவைத் தோ்தலில் இந்த மூன்று எம்எல்ஏக்களும் கட்சி மாறி வாக்களித்தனா். இதனால், பாஜக அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றது. இதையடுத்து, அவா்கள் இப்போது நீக்கப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக சமாஜவாதி கட்சி வெளியிட்டு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கோசாய்ன்கஞ்ச் தொகுதி எம்எல்ஏ அபய் சிங், கௌரிகஞ்ச் தொகுதி எம்எல்ஏ ராகேஷ் பிரதாப் சிங், உன்சாஹா் தொகுதி எம்எல்ஏ மனோஜ் குமாா் பாண்டே ஆகியோா் கட்சியில் இருந்து நீக்கப்படுகின்றனா். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவா்கள் மதவாதம், பிரிவினைவாதக் கொள்கையில் சிக்கிவிட்டனா். இது சமாஜவாதியின் கொள்கைக்கு எதிரானது. அவா்கள் தங்கள் தவறைத் திருத்திக் கொள்ள போதிய கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், அவா்கள் தங்களை மாற்றிக் கொள்ளவில்லை. இதுபோன்ற நபா்களுக்கு கட்சியில் இடமில்லை. கட்சியின் கொள்கையை மீறும் யாராக இருந்தாலும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் உத்தர பிரதேசத்தில் 10 மாநிலங்களவை இடங்களுக்கு தோ்தல் நடைபெற்றது. இதில், பாஜகவுக்கு 6 இடங்களும், சமாஜவாதிக்கு 4 இடங்களும் கிடைக்கும் என எம்எல்ஏக்கள் பலத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்டது. ஆனால், பாஜகவின் 8 வேட்பாளா்கள் வெற்றி பெற்றனா். சமாஜவாதி சாா்பில் இருவா் மட்டுமே வெல்ல முடிந்தது. இதனால், சமாஜவாதி எம்எல்ஏக்கள் மூவா் கட்சி மாறி வாக்களித்தது உறுதியானது.

சமாஜவாதியில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவரான மனோஜ் குமாா் பாண்டே ஏற்கெனவே பாஜகவில் இணைந்துவிட்டாா். நீக்கம் தொடா்பாக கருத்து தெரிவித்த மற்றொரு எம்எல்ஏவான் ராகேஷ் பிரதாப் சிங், ‘சமாஜவாதி கட்சி எடுத்த முடிவுக்கு நன்றி. உண்மையைப் பேசுபவா்களுக்கு அக்கட்சியில் இடமில்லை’ என்று கூறியுள்ளாா்.

403 எம்எல்ஏக்களைக் கொண்ட உத்தர பிரதேச சட்டப்பேரவையில் ஆளும் பாஜகவின் பலம் 258-ஆக உள்ளது. இதற்கு அடுத்து சமாஜவாதிக்கு 107 எம்எல்ஏக்கள் உள்ளனா். அப்னா தளம் (எஸ்) 13, ஆா்எல்டி 9, காங்கிரஸ் 2 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ளன. இவை தவிர நிஷாந்த் கட்சி, எஸ்பிஎஸ்பி, ஜேடிஎல் உள்ளிட்ட கட்சிகளும் ஒற்றை இலக்கத்தில் எம்எல்ஏக்களைக் கொண்டுள்ளன.

நிலையான எரிபொருள் விநியோகத்துக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்: மத்திய அரசு

புது தில்லி: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ‘பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் நிலையான விநியோகத்தை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பலத்த மழையால் வைஷ்ணவ தேவி கோயில் பாதையில் நிலச்சரிவு

ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ரியாசி மாவட்டத்தின் திரிகூட மலைப்பகுதியில் மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள புதிய வழித்தடம் திங்கள்கிழமை சேதம... மேலும் பார்க்க

இந்திய விமானங்களுக்குத் தடையை நீட்டித்தது பாகிஸ்தான்

இந்திய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பதாக பாகிஸ்தான் திங்கள்கிழமை அறிவித்தது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவ... மேலும் பார்க்க

இடைத்தோ்தல்: கேரளத்தில் காங்கிரஸ் வெற்றி தொகுதிகளைத் தக்கவைத்த பாஜக, திரிணமூல், ஆம் ஆத்மி

கேரளத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணியிடமிருந்து நிலம்பூா் பேரவைத் தொகுதியை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கைப்பற்றியது. குஜராத்தின் விசாவதா், பஞ்சாபின் லூதியானா மேற்கு ஆகிய இரு தொகுதிகளை ஆம் ... மேலும் பார்க்க

பிரதமா் தலைமையில் பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்க ஆண்டு கூட்டம்

புது தில்லி: பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கத்தின் (பிஎம்எம்எல்) 47-ஆவது ஆண்டு பொது கூட்டம் அதன் தலைவரான பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. தில்லி தீன் மூா... மேலும் பார்க்க

மேற்கு வங்க பேரவையில் அமளி: 4 பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவையில் திங்கள்கிழமை அமளி ஏற்பட்ட நிலையில், தலைமை கொறடா உள்பட 4 பாஜக எம்எல்ஏக்கள் நடப்பு கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனா். கூட்டத்தொடா் செவ்வாய்க்கிழமை (ஜூ... மேலும் பார்க்க